search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியகுளம்"

    பெரியகுளம் அருகே கள்ளக்காதல் ஜோடி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே வடுகப்பட்டி சேடப்பட்டியை சேர்ந்தவர் சங்கனமுத்து. இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி அப்பகுதியில் உள்ள கார் ஷோரூம்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

    அதே கம்பெனியில் திண்டுக்கல் சின்னாள பட்டியை சேர்ந்த தேவி (வயது32) என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளனர். தேவிக்கு திருமணம் ஆகி ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்ததால் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பல்வேறு இடங்களுக்கு காதல் ஜோடியினர் தனிமையில் சென்றுள்னனர். இந்த விவகாரம் கம்பெனி உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரையும் வேலையை விட்டு நிறுத்தி விட்டனர்.

    இதனால் மனமுடைந்த கள்ளக்காதல் ஜோடி பெரியகுளம் அருகே வடுகபட்டி- தாமரைக்குளம் சாலையில் உள்ள தென்னந் தோப்பிற்கு வந்தனர். கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானம் அடைந்த 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி தோப்பில் இருந்த மோட்டார் ரூம்பில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை அப்பகுதியில் சென்றவர்கள் காதல் ஜோடி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தென்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேர் உடலையும் கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற மாணவி மாயமானது குறித்து பெற்றோர் போலீசார் புகார் செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் வடக்குகாலனி பகுதியை சேர்ந்தவர் ராஜூ மகள் மஞ்சு(வயது17). பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று தேர்வு எழுதச்செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் மஞ்சு வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கல்லூரிக்கு வந்து விசாரித்தனர்.

    ஆனால் அவர் தேர்வு முடிந்து ஊர் திரும்பியதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கோகிலாபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் மனோஜ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    ×