search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "missing student"

    கும்மிடிபூண்டி அருகே மாயமான பள்ளி மாணவன் எண்ணூர் கடற்கரையில் பிணமாக கிடந்தான். நண்பர்களுடன் குளிக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கும்மிடிபூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த பண்பாக்கம் கிராமத்தைச்சேர்ந்த ரவி என்பவரின் மகன் செல்வம் என்கிற சாமுவேல்(19). இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே. அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 13-ந்தேதி, பள்ளியில் நடைபெறும் தனி வகுப்பிற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுச்சென்ற செல்வம் வீடு திரும்பவில்லை. அன்றைய தினம் அவர் பள்ளிக்கு செல்லவில்லை.

    அவரது நண்பர்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித பலனும் இல்லை. மாணவர் செல்வம் மாயமானது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று எண்ணூர் கடற்பகுதியில் சுமார் 19 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் பிணம் கரை ஒதுங்கியது. எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கும்மிடிப்பூண்டி அருகே காணாமல் போன பள்ளி மாணவர் செல்வம் என்பது தெரியவந்தது.

    கடந்த 13-ந்தேதி நண்பர்களுடன் சென்னை விம்கோ நகரையொட்டி உள்ள கடற்கரைப் பகுதிக்கு சென்று செல்வம் குளித்து உள்ளார். அப்போது கடல் அலையில் சிக்கி மூழ்கி இருக்கிறார். ஆனால் அவரது நண்பர்கள், உறவினர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பெரியகுளம் அருகே கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற மாணவி மாயமானது குறித்து பெற்றோர் போலீசார் புகார் செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் வடக்குகாலனி பகுதியை சேர்ந்தவர் ராஜூ மகள் மஞ்சு(வயது17). பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று தேர்வு எழுதச்செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் மஞ்சு வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கல்லூரிக்கு வந்து விசாரித்தனர்.

    ஆனால் அவர் தேர்வு முடிந்து ஊர் திரும்பியதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கோகிலாபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் மனோஜ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    ×