செய்திகள்

வேலூர் அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தீக்குளிப்பு: தொழிலாளிக்கு வலைவீச்சு

Published On 2017-10-21 12:15 GMT   |   Update On 2017-10-21 12:15 GMT
வேலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு தொழிலாளி பாலியல் தொந்தரவு கொடுத்ததால் இளம்பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

வேலூர்:

வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் கோபி (வயது 38), தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் மனம் உடைந்த இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News