செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது

Published On 2017-10-20 13:00 GMT   |   Update On 2017-10-20 13:01 GMT
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணிக்கு நீர்வரத்து 5 ஆயிரத்து 799 கன அடியாக இருந்தது. இன்று காலை 8 மணிக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது.

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த 3 மாதங்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 17-ந்தேதி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15 ஆயிரத்து 677 கனஅடியாக இருந்தது. தற்போது மழை குறைந்து விட்டதால் நீர்வரத்து குறையத் தொடங்கியது.

நேற்று காலை 8 மணிக்கு நீர்வரத்து 5ஆயிரத்து 799 கன அடியாக இருந்தது. இன்று காலை 8 மணிக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது. தற்போது 5 ஆயிரத்து ஒரு கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக 20 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.98 அடியாக உள்ளது.

Tags:    

Similar News