செய்திகள்

ராயபுரத்தில் பைக்ரேஸ் விபத்தில் டெய்லர் மரணம்: போலீசார் விசாரணை

Published On 2017-10-16 09:51 GMT   |   Update On 2017-10-16 09:51 GMT
ராயபுரத்தில் பைக்ரேஸ் விபத்தில் டெய்லர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:

ராயபுரம் தம்பு லைன் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 37). டெய்லர். நேற்று மாலை அவர் ராயபுரம் மேம்பாலம் அருகே மன்னார் சாமி கோவில் தெருவில் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென முகமது ரபீக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி முகமதுரபீக் பரிதாபமாக இறந்தார்.

பலியான முகமது ரபீக் சாலையை கடந்தபோது 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் ரேஸ் சென்றுள்ளனர். அதில் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் முகமது ரபீக் மீது மோதியுள்ளது.

இதுதொடர்பாக பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வாலிபரை போலீசார் பிடித்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News