செய்திகள்

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலையை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

Published On 2017-10-15 08:26 GMT   |   Update On 2017-10-15 08:26 GMT
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலையை கண்டித்து பாரதிய ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை:

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்க தொண்டர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை கண்டித்து பா.ஜனதா சார்பில் இன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

மாநிலத்தின் முதல்வரே படுகொலையை தூண்டி விடும் அளவுக்கு கேரளாவில் நிலைமை இருக்கிறது. பயங்கரவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் பா.ஜனதாவின் முதல் வேலை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் இல. கணேசன் எம்.பி., பொது செயலாளர் வானதி சீனிவாசன், அனுசந்திர மவுலி, மண்டல தலைவர்கள் காளிதாஸ், ஜெய்சங்கர், மாவட்ட தலைவர்கள் டால்பின் ஸ்ரீதர், தனஞ்செயன், கிருஷ்ணகுமார், மற்றும் வேளச்சேரி திருப்புகழ், ரவிச்சந்திரன், ஏ.என்.எஸ். பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News