செய்திகள்

அமித்ஷா மற்றும் அவரது மகன் மீது ஊழல் புகார்: காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Published On 2017-10-10 12:09 GMT   |   Update On 2017-10-10 12:09 GMT
பா. ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகன் மீது எழுந்துள்ள ஊழல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தக்கலை:

பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகன் மீது எழுந்துள்ள ஊழல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தக்கலை தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் டாக்டர் தம்பி விஜயகுமார் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் வட்டார தலைவர் ஜான்கிறிஸ்டோபர், ஜெகன் ராஜ், முன்னாள் வட்டார தலைவர் ரத்தினகுமார், மாவட்ட செயலாளர்கள் சாம்செல்வகுமார், ஜான் இக்னேசியஸ், மாவட்ட துணை தலைவர் மலுக்கு முகம்மது, ஏசுராஜா, மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜேஷ்குமார் ஹனுகுமார், ஜோன்ஸ் இம்மானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News