தமிழ்நாடு

பிளஸ்-2 பொதுத்தேர்வு: தஞ்சாவூரில் 93.46 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

Published On 2024-05-06 07:08 GMT   |   Update On 2024-05-06 07:08 GMT
  • தஞ்சையில் 227 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 819 மாணவர்கள், 13 ஆயிரத்து 915 மாணவிகள் என 25 ஆயிரத்து 734 பேர் தேர்வு எழுதினர்.
  • கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் 95.18 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு அதை விட 1.72 சதவீதம் குறைந்துள்ளது.

தஞ்சாவூர்:

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து மதிப்பெண்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்தன. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று காலை பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தஞ்சை மாவட்டத்தில் 227 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 819 மாணவர்கள், 13 ஆயிரத்து 915 மாணவிகள் என 25 ஆயிரத்து 734 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 10 ஆயிரத்து 710 மாணவர்கள், 13 ஆயிரத்து 342 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 52 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.46 ஆகும்.

கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் 95.18 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு அதை விட 1.72 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News