search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழல் புகார்"

    ஊழல் புகாரில் சிக்கிய ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட மத்திய அரசு ஊழியர்கள் 79 பேர் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்காமல் அரசு துறைகள் இழுத்தடித்து வருகின்றன.
    புதுடெல்லி:

    ஊழல் புகாரில் சிக்கிய ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி உள்பட மத்திய அரசு ஊழியர்கள் 79 பேர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் காத்திருக்கிறது. ஆனால், 4 மாதங்களுக்கு மேல் ஆகியும், சம்பந்தப்பட்ட அரசு துறைகள் அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றன.

    இந்த ஊழியர்கள் மீது மொத்தம் 41 வழக்குகள் தொடரப்பட உள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 9 வழக்குகள், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

    உத்தரபிரதேச அரசின் அனுமதிக்காக 8 வழக்குகளும், பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி ஆகியவற்றின் அனுமதிக்காக 4 வழக்குகளும், யூனியன் பிரதேச அரசுகளின் அனுமதிக்காக 3 வழக்குகளும் காத்திருக்கின்றன.

    வழக்கு தொடர விரைந்து அனுமதி வழங்குமாறு நினைவுபடுத்தி இருப்பதாக ஊழல் கண்காணிப்பு ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    அரசியல் ஆதாயத்துக்காக மோடி மீது ராகுல் காந்தி ஊழல் புகார் சொல்வதாக நிதின் கட்காரி குற்றம் சாட்டினார். #NitinGadkari #RahulGandhi #Modi
    நாக்பூர்:

    அரசியல் ஆதாயத்துக்காக மோடி மீது ராகுல் காந்தி ஊழல் புகார் சொல்வதாக நிதின் கட்காரி குற்றம் சாட்டினார். ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான நிதின் கட்காரி ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடியை பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும் விதம் நல்லதல்ல. அரசியல் ஆதாயத்துக்காக மோடிக்கு எதிராக அவர் ஊழல் புகார்களை சுமத்தி வருகிறார்.



    பிரதமர், ஒரு கட்சிக்கு சொந்தமானவர் அல்ல. நாட்டுக்கே சொந்தமானவர். எனவே, பிரதமரை மதித்து அங்கீகரிக்க வேண்டிய கடமை, ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. ஆனால், துரதிருஷ்டவசமாக, மோடிக்கு எதிராக மோசமான வார்த்தைகளை ராகுல் பயன்படுத்தி வருகிறார்.

    ஏழைகளுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது, வெறும் கவர்ச்சி கோஷம். ஏழைகளிடம் ஓட்டு வாங்குவதற்கான அரசியல் வியூகம். இத்திட்டத்தை அமல்படுத்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கோடி தேவைப்படும். இவ்வளவு பணம் எங்கிருந்து வரும்?

    ஒருவேளை, இதற்காக இவ்வளவு பணத்தை பயன்படுத்தினாலும், விவசாயம் போன்ற இதர துறைகளுக்கான பணத்துக்கு என்ன செய்வது? அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்ற கவர்ச்சி திட்டங்களை பின்பற்றுவது பொருளாதாரத்தை பாதிக்கும். காங்கிரசின் நம்பகத்தன்மையும் சரிந்து விடும்.

    இப்போதைய தேவை, வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நல்ல கொள்கைகளை வகுப்பதுதான். அதுபோல், வளர்ச்சி விகிதத்தையும், தனிநபர் வருமானத்தையும் உயரச்செய்ய வேண்டும். ‘வறுமையை ஒழிப்போம்’ என்று 1947-ம் ஆண்டில் இருந்தே காங்கிரஸ் கட்சி கோஷம் எழுப்பி வருகிறது. பின்னர், 40 அம்ச திட்டம், 20 அம்ச திட்டம், 5 அம்ச திட்டம் என்று போட்டார்கள். ஆனால், எதுவும் பயன்படவில்லை.

    மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அவர்கள் எங்களுக்கு வழிகாட்டியாகவும், உந்துசக்தியாகவும் திகழ்பவர்கள்.

    ஊடகம், கார்ப்பரேட், சினிமா தொழில் என எதுவாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் வயது வரம்பு உள்ளது. அதன் அடிப்படையில், அவர்கள் விஷயத்தில் கட்சி ஒரு முடிவு எடுத்துள்ளது.

    எதிர் கருத்து கொண்டவர்களை தேச விரோதிகளாக பா.ஜனதா கருதுவது இல்லை என்று அத்வானி கூறியிருப்பது கட்சியின் கருத்துதான். நாங்கள் எல்லோரும் அத்வானியுடன் உடன்படுகிறோம். மோடியும் உடன்படுகிறார். ஆனால், சிலர் அத்வானி கூறியதை தவறாக மேற்கோள்காட்டி பேசுவது முற்றிலும் தவறானது.

    நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில்தான், எங்கள் அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. அது பலன் அளிக்க சிறிது காலதாமதம் ஆகும். இருப்பினும் வலிமையான பலன்களை அளிக்கும். விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி, கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

    எல்லா தொழில்களும் ஒரு வட்டம் போன்றதுதான். உயர்வு, தாழ்வு இருக்கும்.

    தேர்தல் காலத்தில் விவாதிப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், தேச பாதுகாப்பு என்பது விவாதத்துக்கு உரிய விஷயம் அல்ல. காங்கிரஸ் கட்சியோ, தேச பாதுகாப்பை அரசியல் ஆக்கி வருகிறது. 21-ம் நூற்றாண்டின் முக்கிய கொள்கை, முன்னேற்றமும், வளர்ச்சியுமாக இருக்கும். இந்த தேர்தலில், பா.ஜனதா நியாயமான, நல்ல பெரும்பான்மை பெறும். மோடிதான் எங்களின் அடுத்த பிரதமர்.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார். #NitinGadkari #RahulGandhi #Modi
    மத்திய மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டவர்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. உயர் அதிகாரி கூறிய ஊழல் புகார்களை, ‘கிரைம் திரில்லர்’ சினிமா படத்துடன் ஒப்பிட்டு ராகுல் விமர்சித்துள்ளார். #CBI #DIGCorruption #Episode #CrimeThrill #RahulGandhi
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையேயான மோதலில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரின் அதிகாரத்தையும் பறித்து, கட்டாய விடுமுறையில் அனுப்பியது. இடைக்கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது.

    இதை எதிர்த்து அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டு உள்ளார். இந்த வழக்கு நேற்று முன்தினம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான புகார்களை விசாரித்து வந்த சி.பி.ஐ. உயர் அதிகாரி எம்.கே. சின்கா தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அவர், மராட்டிய மாநிலம் நாக்பூருக்கு மாற்றப்பட்டதை ரத்துசெய்யக்கோரி உள்ளார்.

    மேலும் அவர் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் வழக்கு விசாரணையில், மத்திய மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி. சவுத்ரி உள்ளிட்டோர் தலையிட முயற்சித்தனர் என குற்றம் சாட்டி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி அஜித் தோவலும், கே.வி. சவுத்ரியும் உடனடியாக பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

    ஆனால் மத்திய மந்திரி ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி, இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு, தீய நோக்கம் கொண்டது என கூறி மறுத்தார்.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. உயர் அதிகாரி தெரிவித்துள்ள ஊழல் புகார் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கடுமையாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டுள்ளார்.

    அவர் சி.பி.ஐ. உயர் அதிகாரி எம்.கே. சின்காவின் ஊழல் புகாரை, ‘கிரைம் திரில்லர்’ (குற்றப்புலனாய்வு) சினிமா படத்துக்கு ஒப்பிட்டுள்ளார்.

    அதில் அவர், “சவுதிகார் இஸ் தீப் (காவலாளியே திருடர்) என்னும் கிரைம் திரில்லர் படம் டெல்லியில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் புதிய அத்தியாயத்தில், சி.பி.ஐ. உயர் அதிகாரி மிக கடுமையான குற்றச்சாட்டுகளை ஒரு மத்திய மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், சட்டத்துறை செயலாளர், மத்திய மந்திரிசபை செயலாளர் ஆகியோர் மீது சுமத்தி உள்ளார்” என கூறி இருக்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி தன்னை நாட்டின் காவலாளி என கூறுவது வழக்கம். அதை ராகுல் காந்தி தொடர்ந்து கிண்டல் அடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    இதற்கு மத்தியில் ராகுல் காந்தி வரும் 28-ந்தேதி சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மிசோரம் மாநிலத்தில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். சாம்பாய் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பாரதீய ஜனதா கட்சியை கடுமையாக சாடினார்.

    அப்போது அவர், “மிசோரம் மாநிலத்தில் நுழைவதற்கு இது ஒன்றுதான் வாய்ப்பு என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதா கட்சியும் உணர்ந்து கொண்டுள்ளன. அவர்கள் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவதில்லை என்பதை அறிந்துள்ளனர்” என கூறினார்.

    அந்த மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி, பாரதீய ஜனதா கட்சியின் கூட்டாளி என விமர்சித்தார்.

    மிசோரமின் கலாசாரத்தை அழிக்கும் முயற்சியில் பாரதீய ஜனதா கட்சிக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் மிசோ தேசிய முன்னணி உதவுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது வருத்தம் அளிப்பதாக அவர் கூறினார்.

    சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா உள்ளிட்ட அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிவிசி விசாரணை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CVCinquiry #CBIVsCBI #AlokVerma
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது மற்றொருவர் பரஸ்பரம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

    அத்துடன் தற்காலிக சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டு, உடனடியாக பொறுப்பேற்றார். சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகார் குறித்து விசாரிக்க புதிய குழுவும் அமைக்கப்பட்டது.



    இந்நிலையில், அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட பல்வேறு சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தக் கோரி தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ அதிகாரிகள் ஒருவர் மீது மற்றொருவர் கூறும் லஞ்ச புகார்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    முதலில் 10 நாட்களில் விசாரணையை முடிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால் 10 நாட்கள் போதாது என்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து 2 வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #CVCinquiry #CBIVsCBI #AlokVerma

    சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து எஸ்ஐடி விசாரணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை அவசர வழக்காக விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்கிறது. #CBIVsCBI #RakeshAsthana #GraftCharges
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்துடன் தற்காலிக இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார். மேலும் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகார் குறித்து விசாரிக்க புதிய குழுவும் அமைக்கப்பட்டது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட பல்வேறு சிபிஐ அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி பூஷன் கேட்டுக்கொண்டார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்யும்படி பிரசாந்த் பூஷனை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். அதன்பின்னர் வழக்கு விவரங்களை ஆய்வு செய்து அவசர வழக்காக விசாரிப்பது பற்றி பரிசீலனை செய்வதாகவும் தெரிவித்தனர். #CBIVsCBI #RakeshAsthana #GraftCharges

    சீனாவின் முன்னாள் துணை நிதி மந்திரி சாங் ஷாவ்சுன் ஊழல் புகாரில் இன்று கைது செய்யப்பட்டார். #ZhangShaochunarrested #corruptioncharges
    பீஜிங்:

    சீனாவில் ஊழல் குற்றசாட்டுகளுக்கு உள்ளாகும் மந்திரிகள் மற்றும் உயரதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் க்சி ஜின்பிங்  உத்தரவிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் பல முன்னாள் மந்திரிகளும், முன்னாள் இந்நாள் உயரதிகாரிகளை லஞ்ச, ஊழல் ஒழிப்புத்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிதித்துறை முன்னாள் துணை மந்திரி சாங் ஷாவ்சுன் இன்று கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? என்பது தொடர்பான தெளிவான விபரங்கள் எதையும் சீன ஊடகங்கள் வெளியிடவில்லை. #ZhangShaochunarrested  #corruptioncharges
    ஊழல் புகாரை சட்ட ரீதியாக எதிர்கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டு வருவார் என்று அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தெரிவித்தார். #Incometax #MinisterVijayabaskar

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு மாறாக எதிர்க்கட்சியினர் புகார் கூறி வருகின்றனர். உண்மையும், ஆதாரமும் இல்லாமல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதையும் கூற மாட்டார்.

    ஊழல் புகாரினை சட்ட ரீதியாக எதிர்கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் அதில் இருந்து மீண்டு வருவார். அவரை பதவி விலகச் சொல்பவர்கள் முன் உதாரணமாக இருந்துள்ளார்களா? என நினைத்து பார்க்க வேண்டும்.

    ரஜினி உள்ளிட்டோர் மக்களின் நாடித்துடிப்பை பார்த்து அரசியலுக்கு வர வேண்டும். நாடி ஜோசியம் பார்க்கக்கூடாது. தினகரன் தனது நலனை முன்னிலைப்படுத்தியே செயல்படுகிறார். மக்கள் நலனில் அவர் அக்கறை கொள்ளவில்லை.

    அ.தி.மு.க.வுக்கு எதிரி தி.மு.க.வும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #Incometax #MinisterVijayabaskar

    மலேசிய முன்னாள் பிரதமர் மீது ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் அவரது வீட்டில் 100 கிலோ தங்கம், ரூ.171 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.#MalaysiaNajibRazak #NajibRazak
    கோலாலம்பூர்:

    மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இவரது கட்சி தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி கூட்டணி, ஆட்சியை பிடித்தது. எனவே மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றார்.

    அதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோலாலம்பூரில் பெவிலியோன் அடுக்குமாடி குடியிருப்பில் ரசாக்குக்கு சொந்தமான 2 வீடுகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது 72 பைகளில் பதுக்கி வைத்திருந்த தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் எடை 100 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ரூ.171 கோடி ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது, இவைதவிர விலை உயர்ந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் 350 பெட்டிகளில் அடைக்கப்பட்டு 5 லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டது.



    இவை தவிர ரசாக்கின் வீட்டில் ஒரு பாதுகாப்பு பெட்டகமும் உள்ளது. அதன் சாவி தொலைந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இருந்தாலும் அதை திறக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பெட்டகம் திறக்கப்பட்டால் மேலும் தங்கம், பணம் மற்றும் விலை உயர்ந்த ரத்தினங்கள் சிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.#MalaysiaNajibRazak #NajibRazak
    ×