தமிழ்நாடு

பிளஸ்-2 தேர்வில் திருவண்ணாமலை கடைசி இடம்

Published On 2024-05-06 07:13 GMT   |   Update On 2024-05-06 07:14 GMT
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் 12,724 மாணவர்கள், 13,827 மாணவிகள் என 26,551 பேர் தேர்வு எழுதினர்.
  • திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12,724 மாணவர்கள், 13,827 மாணவிகள் என 26,551 பேர் தேர்வு எழுதினர்.

இதில் 11,037 மாணவர்கள் 12,984 மாணவிகள் என மொத்தம் 24,021 பேர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் மாநில அளவில் இந்த ஆண்டு கடைசி இடத்தை பிடித்தது.

Tags:    

Similar News