செய்திகள்

சூலூர் அருகே கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2017-10-06 11:41 GMT   |   Update On 2017-10-06 11:42 GMT
சூலூர் அருகே கல்லூரி மாணவி சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:

சூலூர் அருகே கல்லூரி மாணவி சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. இவரது மகள் கிருபா (வயது 18) மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய கிருபா சாணிப்பவுடர் குடித்து மயங்கி மயங்கி விழுந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

தகவலின்பேரில் சூலூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். கிருபா கல்லூரி முடிந்ததும் பஸ்சில் வீடு திரும்புவது வழக்கம். அப்போது வாலிபர்கள் சிலர் அவரை ஈவ்டீசிங் செய்ததாக கூறப்படுகிறது.

எனவே ஈவ்டீசிங் கொடுமையால் கிருபா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் எதுவும் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News