செய்திகள்
உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிரான மு.க.ஸ்டாலின் வழக்கு தள்ளிவைப்பு
சட்டசபையில் குட்காவை காட்டிய விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீசுக்கு எதிரான மு.க.ஸ்டாலின் வழக்கை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை உறுதிபடுத்தும் வகையில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் குட்கா போதை பொருளை காட்டினார்கள்.
அது உரிமை மீறல் என்று கூறி அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து உரிமைக்குழு நோட்டீசு அனுப்பியது.
இதனை எதிர்த்து மு.க.ஸ்டாலின் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருகிற 20-ந்தேதிக்கு வழக்கை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.