செய்திகள்
அம்பத்தூர்: மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
அம்பத்தூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அம்பத்தூர்:
அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் சுரேஷ் குமார்(36). நேற்று இரவு அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் இறந்தார்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி சுரேஷ்குமாரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். அவர்களை உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் கிஷோரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் சுரேஷ் குமார்(36). நேற்று இரவு அவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் இறந்தார்.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி சுரேஷ்குமாரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். அவர்களை உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் கிஷோரை போலீசார் கைது செய்தனர்.