செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகே மர்ம பொருள் வெடித்து வாலிபர் கை துண்டானது
தேன்கனிக் கோட்டை அருகே உள்ள சாரகபள்ளி கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் மர்ம பொருள் வெடித்து வாலிபர் கை துண்டானது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேனகனிக்கோட்டை வட்டம் தொட்ட மஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பன் மகன் பசவலிங்கா (வயது 25). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் தேன்கனிக் கோட்டை அருகே உள்ள சாரகப்பள்ளி கிராமத்தில் ராஜண்ணா என்பவரின் தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மர்ம பொருள் கிடப்பதை கண்ட அவர் அதை கையில் எடுத்தார். அப்போது அந்த மர்ம பொருள் திரன்று வெடித்தது. இதில் அவரது இடது கை துண்டானது. உடலில் பல்வேறு இடங்களில் காயங்களும் ஏற்பட்டது.
வலியால் அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த மர்ம பொருள் காட்டு பன்றிகளை கொல்வதற்காக வைக்கப்பட்ட வெடி பொருளாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேனகனிக்கோட்டை வட்டம் தொட்ட மஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பன் மகன் பசவலிங்கா (வயது 25). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் தேன்கனிக் கோட்டை அருகே உள்ள சாரகப்பள்ளி கிராமத்தில் ராஜண்ணா என்பவரின் தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மர்ம பொருள் கிடப்பதை கண்ட அவர் அதை கையில் எடுத்தார். அப்போது அந்த மர்ம பொருள் திரன்று வெடித்தது. இதில் அவரது இடது கை துண்டானது. உடலில் பல்வேறு இடங்களில் காயங்களும் ஏற்பட்டது.
வலியால் அவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த மர்ம பொருள் காட்டு பன்றிகளை கொல்வதற்காக வைக்கப்பட்ட வெடி பொருளாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.