செய்திகள்
தேனி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை
தேனி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகில் உள்ள பொம்மிநாதபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் கண்ணன் (20). கேரளாவில் கிணறு தோண்டும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2 மாதமாக வேலை இல்லாமலேயே வீட்டிலேயே இருந்தார். இதனால் மனமுடைந்த கண்ணன் மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.