செய்திகள்

காதலியை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு: தொழிலாளி தற்கொலை

Published On 2017-08-11 10:16 GMT   |   Update On 2017-08-11 10:17 GMT
அன்னூர் அருகே காதலியை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 34). இவர் அந்த பகுதியில் உள்ள மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்த ஒரு இளம்பெண்ணுடன் அருண்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மேலும் பல இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்தனர்.

இந்தநிலையில் அந்த இளம்பெண் 8 மாத கர்ப்பமானார். எனவே தன்னை திருமணம் செய்யும் படி அருண்குமாரிடம் அவர் கூறினார். ஆனால் அருண்குமாரின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர்.

இதனால் கடந்த சில நாட்களாக அருண்குமார் மனவேதனையுடன் காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அருண்குமார் காதலியை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட அருண்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News