செய்திகள்

திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி மரணம்

Published On 2017-08-01 11:01 GMT   |   Update On 2017-08-01 11:01 GMT
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் மோகன் (வயது48). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.

ஆலம்பட்டி மெயின் ரோட்டில் சென்ற போது திடீரென நாய் குறுக்கே சென்றது. இதனால் மோட் டார் சைக்கிள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த மோகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவர் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News