செய்திகள்
தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது” என்றனர்.
நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி நடுவட்டத்தில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சின்னக்கலாறு, வால்பாறையில் தலா 2 செ.மீ., தேவலா, பொள்ளாச்சி மற்றும் புதுச்சேரியில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது” என்றனர்.
நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி நடுவட்டத்தில் அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சின்னக்கலாறு, வால்பாறையில் தலா 2 செ.மீ., தேவலா, பொள்ளாச்சி மற்றும் புதுச்சேரியில் தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.