செய்திகள்
கமலின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நாகரீகமாக பதிலளித்திருக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
நடிகர் கமலின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நாகரீகமாக பதிலளித்திருக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அவனியாபுரம்:
சென்னை செல்வதற்காக இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. அவராகவே வந்தார். அவராகவே சென்றார். அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது.
தனி ஒரு மனிதன் கேள்வி கேட்பதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. கமலின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நாகரீகமாக பதிலளித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை செல்வதற்காக இன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் பரவாமல் இருக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. அவராகவே வந்தார். அவராகவே சென்றார். அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட்டது.
தனி ஒரு மனிதன் கேள்வி கேட்பதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. கமலின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் நாகரீகமாக பதிலளித்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.