ரெட்டியார்பாளையத்தில் மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை முயற்சி
புதுச்சேரி:
பூமியான்பேட் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜா. (வயது 38). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவருக்கு திலோர் தாம்பாள் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள ராஜா வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். இதனால் அடிக்கடி கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
நேற்று மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு பணம் கொடுக்க மனைவி மறுத்தார். இந்த நிலையில் டியூசனுக்கு சென்ற தனது மகன்களை அழைத்து வர திலோர்தாம்பாள் சென்றார்.
அந்த நேரத்தில் வீட்டில் இருந்த ராஜா விஷம் குடித்தார். பின்னர் அவர் பக்கத்து வீட்டுக்காரர் முருகனிடம் சென்று தான் விஷம் குடித்து விட்டதாக கூறினார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவர் விஷம் குடித்த தகவல் அறிந்த மனைவி அலறியடித்து அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
இதுகுறித்து ரெட்டியார் பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டு இருசப்பன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.