செய்திகள்
சோளம்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது லாட்டரி சீட்டு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் சூரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சோளம்பள்ளம் பஸ் நிறுத்தம் அருகே ஒருவர் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சேலம் மல்லமூப்பம்பட்டியை சேர்ந்த சேகர் என்பவர் லாட்டரி சீட்டை விற்றது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது அவரிடம் 100 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.