search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் ரோந்து"

    • போலீசார் ரோந்து பணியில் சிக்கினர்
    • அரசு மதுபாட்டில்கள் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    திருவள்ளுவர் தினத்தை முன் னிட்டு நேற்று டாஸ்மாக் கடை களுக்கு விடுமுறை விடப்பட் டது. இதனால் ஜோலார் பேட்டைபோலீஸ் இன்ஸ்பெக் டர் மங்கையர்க்கரசி, சப்- இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது பாச்சல் பகுதியில் பெட்டிக்கடையில் மது விற்பதாக தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்குசென்று பெட்டிக்கடை யில் சோதனை செய்ததில் அரசு மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து கடை உரி மையாளர் ஜோதி (வயது 60) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடுமலை கால்வாய் வாயிலாக 14,612 ஏக்கர், பாசன வசதி பெற்று வருகிறது.
    • 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.

    உடுமலை :

    பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில் உடுமலை கால்வாய் வாயிலாக 14,612 ஏக்கர், பாசன வசதி பெற்று வருகிறது. ஆயக்கட்டு பகுதியில், மக்காச்சோளம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.திருமூர்த்தி அணை அருகே பிரதான கால்வாயில் இருந்து பிரிந்து 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.

    தற்போது இரண்டாம் மண்டலம், மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் இக்கால்வாயில் சென்று வருகிறது. இந்நிலையில், வழியோரத்தில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.

    பருவமழை பெய்யாத பகுதிகளில் நிலைப்பயிராக உள்ள மக்காச்சோளத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. எனவே அனைத்து மடைகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தண்ணீர் திருட்டை தடுக்க இரவு நேரங்களில் போலீஸ், பொதுப்பணித்துறையினர் உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவினர் ரோந்து சென்று தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×