செய்திகள்
பா.ஜ.க தலைவர் அமித்ஷா நாளை புதுவை வருகை
அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா நாளை புதுவை வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனசங்க தலைவர் பண்டிட் தீனதயாளு உபாத் யாயாவின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாக்களில் அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா பங்கேற்று வருகிறார். அதுபோல் புதுவையில் நாளை நடைபெறும் விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
அதற்காக நாளை காலை 10 மணிக்கு விமானம் மூலம் லாஸ்பேட்டை தளத்துக்கு வருகிறார். பின்னர் கட்சி அலுவலகத்துக்கு வரும் அமித்ஷா அங்கு கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசுகிறார். மேலும் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.
அதோடு ஆனந்தா இன் ஓட்டலில் தொழில் அதிபர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். இரவு புதுவையிலேயே தங்கும் அமித்ஷா நாளை மறுநாள் காலை புதுவையில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.
அமித்ஷா புதுவை வருகையையொட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதுவை முழுவதும் பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. கொடி தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. மேலும் அமித்ஷா வருகையையொட்டி புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனசங்க தலைவர் பண்டிட் தீனதயாளு உபாத் யாயாவின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாக்களில் அகில இந்திய பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா பங்கேற்று வருகிறார். அதுபோல் புதுவையில் நாளை நடைபெறும் விழாவில் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
அதற்காக நாளை காலை 10 மணிக்கு விமானம் மூலம் லாஸ்பேட்டை தளத்துக்கு வருகிறார். பின்னர் கட்சி அலுவலகத்துக்கு வரும் அமித்ஷா அங்கு கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசுகிறார். மேலும் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.
அதோடு ஆனந்தா இன் ஓட்டலில் தொழில் அதிபர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மாணவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். இரவு புதுவையிலேயே தங்கும் அமித்ஷா நாளை மறுநாள் காலை புதுவையில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.
அமித்ஷா புதுவை வருகையையொட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதுவை முழுவதும் பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகள், அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. கொடி தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. மேலும் அமித்ஷா வருகையையொட்டி புதுவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.