search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amit Shah"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராகுல்காந்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்தால் அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
    • அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சுல்தான்பூர் மாவட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

    சுல்தான்பூர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார்.

    அமித்ஷாவை கொலைக் குற்றவாளி என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது உத்தரபிரதேசத்தில் சுல்தான்பூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் விஜய் மிஸ்ரா எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சுல்தான்பூர் மாவட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

    அதில் ராகுல்காந்தி, வருகிற 16-ந் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஜய் மிஸ்ரா கூறும்போது, "இந்த சம்பவம் நடந்தபோது பா.ஜனதா துணைத்தலைவராக இருந்தேன். பெங்களூருவில் அமித்ஷாவை ஒரு கொலைகாரர் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.

    இதனால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று முடிவு வந்துள்ளது" என்றார்.

    மேலும் விஜய் மிஸ்ராவின் வக்கீல் சந்தோஷ்குமார் பாண்டே கூறும்போது, "ராகுல்காந்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்தால் அவருக்கு அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்" என்றார்.

    ஏற்கனவே மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையை சூரத் கோர்ட்டு விதித்தது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். இதில் அவரது தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்ததையடுத்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.
    • பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார்.

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி (நாளைமறுதினம்) சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. நேற்று மத்திய அமைச்சரும், பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அமித் ஷா கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சிக்கும், சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் இடையில் ரகசிய புரிந்துணர்வு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பிஆர்எஸ் கட்சிக்கு செல்லும். இதனால் வாக்காளர்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.

     பா.ஜனதா வேட்பாளர் ஈடால ராஜேந்தருக்கு அதிக அளவில் வாக்களிப்பதன் மூலம், அடுத்த தேர்தலில் பிஆர்எஸ் வேட்பாளர்களை பெற முடியாது என்ற தெளிவான தகவலை சந்திரசேகர ராவுக்கு அனுப்ப முடியும்.

     தெலுங்கானா தேர்தலில் சந்திரசேகர ராவ் முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவளிக்கும். அதேபோல் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக சந்திரசேகர ராவ் ஆதரவு அளிப்பார். ஆனால், அந்த பதவிகள் காலியாக இல்லை. காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் குடும்ப கட்சிகள். ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு உறுதியளிக்கும் கட்சிகள்.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொல்லப்பூர் சட்டமன்ற தொகுதியில் சிரிஷா போட்டியிடுகிறார்.
    • எதிர்க்கட்சிகள் அவருக்கு நிதி உதவி செய்வதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மஹபூப் நகரை சேர்ந்தவர் சிரிஷா என்ற பரெலக்கா. பட்டதாரி பெண்ணான இவர் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார்.

    சில மாதங்களுக்கு முன்பு சிரிஷா தான் வளர்த்து வரும் மாடுகளுக்கு மத்தியில் வீடியோ எடுத்து, எருமை மாடுகளால் எப்படி வருமானம் கிடைக்கிறது, தன்னால் எப்படி படிப்பை தொடர முடிகிறது என விவரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    ஆயிரகணக்கான வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சிரிஷாவின் வீடியோவை பார்த்து அவருடன் சமூக வலைத்தளத்தில் இணைந்தனர்.

    இந்த நிலையில் கொல்லப்பூர் சட்டமன்ற தொகுதியில் சிரிஷா போட்டியிடுகிறார். மனு தாக்கல் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    முதலில் சிரிஷாவின் தேர்தல் பிரசாரத்தை கண்டு ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் அலட்சியம் காட்டினர்.

    நாளுக்கு நாள் சிரிஷாவிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வந்தது. ஆதரவு பெருகி வருவதால் அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்து தூக்கத்தை தொலைத்தனர்.

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த சிரிஷா மற்றும் அவரது சகோதரரை சரமாரியாக தாக்கினர். சிரிஷா ரத்த காயங்களுடன் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனால் மேலும் அவருக்கு ஆதரவு பெருகியது.

    தனக்கு அரசியல் கட்சிகளால் ஆபத்து உள்ளதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பெற்றார்.

    பல்வேறு தரப்பில் இருந்து சிரிசாவுக்கு ஆதரவு குவிந்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் அவருக்கு நிதி உதவி செய்வதாக ஆளும் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    தற்போது சிரிஷாவிற்கு சமூக வலைத்தளங்களில் சமூக ஆர்வலர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    அவருக்கு மவுசு அதிகரித்து வருகிறது. அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாரதிய ஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
    • புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிகிறது.

    சென்னை:

    தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது-

    மத்திய புலனாய்வு அமைப்புகளை ஆளும் பாரதிய ஜனதா தனது சாதகத்திற்கு பயன்படுத்தி கொள்கிறது. இத்தகைய அமைப்பினர் தெலுங்கானாவில் குறைந்தது 4 காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்தல் பிரசாரத்தின் போது விசாரணைக்கு அழைத்ததுடன், அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர். ஆனால் இதுவரை பா.ஜனதா வேட்பாளர் யாரையும் புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வில்லை. இதன்மூலம் புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிகிறது.

    பாரதியஜனதா வேட்பாளர்கள் கடவுளால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அவர்களுக்கு தெய்வ ஆசீர்வாதம் உண்டு. ஒரு வேளை பாரதியஜனதா ஆட்சி அமைந்தால் தெலுங்கானா மக்களை அவர்கள் நேரடியாக சொர்க்கத்துக்கு கூட அழைத்து செல்வார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநில சட்டசபை தேர்தல் வருகிற 30-ந் தேதி நடக்கிறது. அங்கு அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தெலுங்கானாவில் சோமாஜி குடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உங்கள் (தெலுங்கானா மக்கள்) வாக்குகள் ஒரு எம்.எல்.ஏ. அல்லது அரசாங்கத்தின் தலைவிதியை மட்டும் தீர்மானிக்காது. தெலுங்கானா மற்றும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஒவ்வொரு கட்சியின் செயல்திறனையும் ஆய்வு செய்த பின்னரே வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைத்து கட்சிகளையும் ஆய்வு செய்தவுடன் நீங்கள் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாவுக்கு வாக்களிப்பீர்கள் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

    சந்திரசேகரராவின் 10 ஆண்டு ஆட்சியை திரும்பி பார்க்கும்போது, ஒரு காலத்தில் வருவாய் உபரி மாநிலமாக இருந்து தற்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் வைத்திருப்பதை காண்கிறோம்.

    இங்கு இளைஞர்கள் மனமுடைந்து போயுள்ளனர். விவசாயிகள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் ஏமாற்றமடைந்துள்ளனர். தெலுங்கானாவின் எதிர்காலம் குறித்து அனைவருக்கும் சந்தேகம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராஜஸ்தானில் காங்கிரஸ் ஒவ்வொரு பகுதியிலும் தோல்வியை சந்திக்கும்.
    • அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் பா.ஜனதா சாதனை படைத்து உள்ளது.

    ஜெய்ப்பூர்:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ராஜஸ்தானில் இன்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். ஜெய்ப்பூரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராஜஸ்தானில் காங்கிரஸ் ஒவ்வொரு பகுதியிலும் தோல்வியை சந்திக்கும். பா.ஜனதா தான் அடுத்த ஆட்சியை அமைக்கும்.

    காங்கிரஸ் அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வாக்கு வங்கி அரசியலால் கலவரக்காரர் கள் மீது ராஜஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசோக் கெலாட்டுக்கு சொந்தமாக எந்த உத்தரவாதமும் இல்லை. அவர் என்ன உத்தரவாதம் அளிக்கிறார்?

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்தது உள்ளிட்டவற்றால் பா.ஜனதா சாதனை படைத்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய அரசின் திட்டங்களால் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 60 முதல் 70 சதவீத வாக்காளர்களின் வாழ்வில் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது.
    • அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய மந்திரி அமித்ஷா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டி வருமாறு:-

    மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு வளர்ச்சி திட்டங்களை தந்துள்ளது. இது குறிப்பாக நகர்ப்புற மற்றும் இளம் வாக்காளர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே 3 மாநிலங்களிலும் நிச்சயம் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். 1995-ம் ஆண்டு முதல் குஜராத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து அருகிறது. கடந்த முறை, இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றோம். மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் ஏழைகளுக்கான நலத்திட்டங்களை காங்கிரஸ் நிறுத்தியது. வளர்ச்சி திட்டங்கள் நிறுத்தப்பட்டு மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

    சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகா தேர்தலில் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால், சில மாதங்களிலேயே அங்குள்ள மக்கள் காங்கிரஸ் அரசின் மீது அதிருப்தி அடைந்துள்ளார்கள். பாராளுமன்ற தேர்தலில், கர்நாடகாவில் பா.ஜ.க., அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    கடந்த முறை இதே காலகட்டத்தில் 5 மாநிலங்களில் பா.ஜனதா தோல்வி அடைந்தது. ஆனால் பாராளூமன்ற தேர்தலில் இந்த மாநிலங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை வென்றோம். நீங்கள் 2024 வரை காத்திருங்கள். முன்பைவிட கூடுதலான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராவார்.

    எதிர்க்கட்சி கூட்டணியில் ஒற்றுமை இல்லை. மத்திய அரசின் திட்டங்களால் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 60 முதல் 70 சதவீத வாக்காளர்களின் வாழ்வில் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. கொரோனா பாதிப்பின்போது கிடைத்த இலவச தானியங்கள், மின்சாரம், தண்ணீர், எரிவாயு, கழிப்பறைகள், ரூ.5 லட்சம் வரையிலான ஆயுஷ்மான் பாரத், குழந்தைகளுக்கான கல்வி முறை போன்றவை சுமார் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளன.

    ஜி20 மாநாடு, புதிய பாராளுமன்ற கட்டிடம், சந்திரயான் நிலவை அடைந்தது போன்றவை மக்களின் வாழ்விலும் மனதிலும் பா.ஜ.க. மீதான மதிப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் மோடி அரசு பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது. மோடி அரசின் நல்லாட்சியால் ஒவ்வொரு பிரிவினரும் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்த அடிப்படையில்தான் நாங்கள் வாக்கு கேட்கிறோம்.

    தேர்தலை மனதில் வைத்து நாங்கள் முடிவுகளை எடுப்பதில்லை. அதை தேர்தலுடன் இணைக்கக்கூடாது. ஒவ்வொரு வரையும் ஜன்தன் கணக்குடன் இணைக்கும் விவகாரம் வந்தபோது, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை என்ற முடிவு எடுக்கப்பட்டபோதும், எரிவாயு வழங்க முடிவு எடுக்கப்பட்டபோதும் தேர்தல் நடக்கவில்லையே. இது அரசின் வேலை. இதை தேர்தல் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.

    நாட்டின் மிகப்பெரிய பலம் இளைஞர்கள், அந்த இளைஞர்களின் மனதில் இந்தியாவின் வலுவான எதிர்காலம் என்ற பிம்பத்தை உருவாக்குவதில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார். இந்த உற்சாகம் இந்தியாவுக்கு பலம் கொடுப்பதோடு, பா.ஜ.க.வுக்கும் பலத்தை அளிக்கிறது. மக்கள் கண்ணியமாக, தலை நிமிர்ந்து வாழும் வலிமை பெற்றுள்ளனர். பா.ஜ.க.வின் அரசியல் செயல்திட்டம் தங்க இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே. அதற்கு அனைவரின் ஆதரவும் தேவை.

    பா.ஜ.க.வைப் பொறுத்தவரை ராமர் கோவில் என்பது அரசியலின் விஷயமாக இருந்ததில்லை, ராம ஜென்ம பூமியும், ஸ்ரீராமரும் எண்ணற்ற மக்களின் நம்பிக்கையின் சின்னங்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது அந்த நம்பிக்கைக்கு மரியாதை. இதை தேர்தல் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்பது மிகவும் குறுகியதாக இருக்கும். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

    இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற உள்ளது. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள சனாதனிகளுக்கும் பெருமை சேர்க்கும் நாளாக இருக்கும். இந்த 550 ஆண்டுகால மோதல், மோடி பிரதமராக இருக்கும்போது தீர்க்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தச் சந்தர்ப்பத்தில், லட்சக்கணக்கான கர சேவகர்களுக்கும், மறைந்த அசோக் சிங்கால் போன்ற தலைவர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் 30-ந்தேதி வாக்குப்பதிவு.
    • சந்திரசேகர ராவ் கட்சி கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது.

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் காங்கிரஸ், பாரதிய ராஷ்டிரிய சமிதி, பா.ஜனதா கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பா.ஜனதா தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா தெலுங்கானா மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து பேரணியில் கலந்து கொள்கிறார். அப்போது தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நல்கொண்டா, வாரங்கல், கட்வால், ராஜேந்திர நகர் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பேரணிகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கு முன்னதாக சோமாஜிபுடாவில் உள்ள பா.ஜனதாவின் மீடியா மையத்தில் வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.

    சந்திரசேகர ராவ் கட்சி கடந்த மாதம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தை தொடங்கியது. அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம் பிடித்துள்ளன.

    காங்கிரஸ் ஆறு வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, சர்க்கரை, பாஸ்மதி அரிசி, சோனாமசூரி அரிசி, ராஜ்மா ஆகியவை விற்பனை.
    • இயற்கை விவசாயம் 190 நாடுகளில் 749 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் செய்யப்பட்டு வருகிறது.

    மக்கள் எடுத்துக்கொள்ளும் உணவு தற்போது விசமாக மாறி வருகிறது. இதனால் பூச்சிக்கொல்லிகள், செயற்கை ஹார்மோன்கள், ரசாயன உரங்கள், கழிவுகள் ஆகியவை இல்லாமல் இயற்கை விவசாயம் மூலம் உணவுப் பொருட்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் உணவு தானியங்கள் ஆர்கானிக் உணவு (இயற்கை விவசாய உற்பத்தி பொருட்கள்) என அழைக்கப்படும்.

    இயற்கை விவசாயம் மூலம் உணவு பொருட்கள் தயாரிக்க செலவு அதிகமாகும். இதனால் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், உற்பத்தி செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்த அளவிலேயே உள்ளன.

    இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்ல மாநில அரசுகள், மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் இதற்காக மத்திய அரசு தேசிய கூட்டுறவு ஆர்கானிக்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இதற்கான லோகோ, இணைய தளம் உள்ளிட்டவைகளை அமித் ஷா வெளியிட்டுள்ள நிலையில், பாரத் ஆர்கானிக்ஸ் பிராண்ட்-ஐ அறிமுகப்படுத்தினார்.

    மேலும், ஐந்து கூட்டுறவு வங்கிகளுக்கு என்.சி.ஓ.எல். உறுப்பினர் சான்றிதழையும் வழங்கினார்.

    மேலும், இதுகுறித்து அவர் பேசுகையில் "என்.சி.ஓ.எல். ஆர்கானிக் உற்பத்தியாளருக்கு (இயற்கை விவசாயிகள்) ஒரு தளமாக அமையும். இன்று நாங்கள் பாரத் ஆர்கானிக்ஸ் பிராண்ட்-ன் கீழ் ஆறு பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். டிசம்பரில் 20 பொருட்கள் அறிமுகப்படுத்தப்படும்.

    துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, சர்க்கரை, பாஸ்மதி அரிசி, சோனாமசூரி அரிசி, ராஜ்மா ஆகியவை சஃபால் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படும். நாடு முழுவதும் சில்லறை விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும். பின்னர் மற்ற நாடுகளிலும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் கிடைக்கும் வருவாயில் 50 சதவீதம் என்.சி.ஓ.எல். மூலம் உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கப்படும்" என்றார்.

    இயற்கை விவசாயம் 190 நாடுகளில் 749 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நடைமுறையில் உள்ளது. இதில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. 2020-ல் இருந்து இந்தியா உற்பத்தி செய்து வருகிறது. 2022-23-ல் இந்தியா 29 லட்சம் டன் தானியங்களை உற்பத்தி செய்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.

    இதில் 3,12,000 டன் பொருட்கள் (5,525 கோடி ரூபாய்) அமெரிக்கா, ஐரோப்பா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

    மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மகாராஷ்டிரா, குஜராத், வடகிழக்கு மாநிலங்களில் சில மாநிலங்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன. நாடு முழுவதும் 7.89 கூட்டுறவு சங்கங்களில் 29 கோடி உறுப்பினர்கள் உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print