செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்
ஆண்டிப்பட்டி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஜி.பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகள் பவித்ரா (வயது 19). இவர் ஆண்டிப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற பவித்ரா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை விஜயகுமார் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பவித்ராவை யாரும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையில் வீட்டை விட்டு வெளியேறினாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.