செய்திகள்

ராயபுரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்: வாலிபர் பலி

Published On 2017-06-23 09:36 GMT   |   Update On 2017-06-23 09:36 GMT
ராயபுரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். படுகாயமடைந்த 2 பேர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ராயபுரம்:

ராயபுரம், பிச்சாண்டி தெருவை சேர்ந்தவர் ரியாஸ் பாஷா. இவரது மகன் நிஜாமுதீன் (வயது 17). இவர்நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் அக்பர், இம்ரான் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்களில் சென்றார்.

ராயபுரம் புதிய மேம்பாலம் அருகே வந்த போது பின்னால் வந்த தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்தக்காயம் அடைந்த நிஜாமுதீன் சம்பவ இடத்திலேயே பலியானார். அக்பர், இம்ரானுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அயோத்தி குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் அமுத ரதி. இன்று காலை அவர் மெரினா கடற்கரையில் உள்ள லெடி வெல்லிங்டன் பள்ளி அருகே நடந்து சென்றார்.

அப்போது அண்ணா சதுக்கத்தில் இருந்து கே.கே.நகர் நோக்கி சென்ற மாநகர பஸ் அமுதரதி மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி பலியானார்.

Tags:    

Similar News