செய்திகள்

விருதுநகரில் 3 கடைகளில் தீ விபத்து

Published On 2017-06-21 10:27 GMT   |   Update On 2017-06-21 10:27 GMT
விருதுநகரில் இரவு நேர உணவகம் உள்பட 3 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்:

விருதுநகர் பழைய பஸ் நிலையம் பகுதியில் கணேஷ் என்பவர் டிபன் சென்டர் நடத்தி வருகிறார். இங்கு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகில் உள்ள 2 கடைகளுக்கும் பரவியது. இதனை பார்த்த அந்த பகுதியில் உள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

விருதுநகர் தீயணைப்பு நிலைய அதிகாரி குமரேசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News