செய்திகள்

கோட்டாரில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2017-05-22 17:29 GMT   |   Update On 2017-05-22 17:29 GMT
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவரது மனைவி அணு(வயது37). சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனவருத்தத்துடன் காணப்பட்டு வந்த அணு வீடடில் விஷம் குடித்து  ஆபத்தான  நிலையில் மயங்கி கிடந்தார்.

 இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று அவர பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.          
Tags:    

Similar News