செய்திகள்

பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் உத்தரவு

Published On 2017-05-21 00:03 GMT   |   Update On 2017-05-21 00:03 GMT
பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த போலீசாரின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் 21 போலீசார் உயிர் இழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News