ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2017-10-02 03:47 GMT   |   Update On 2017-10-02 03:47 GMT
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான, பழனி மலைக்கோவிலில் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் நேற்று குவிந்தனர்.
முருகபெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான, பழனி மலைக்கோவிலில் பிற மாவட்டங்கள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் நேற்று குவிந்தனர்.

தொடர் விடுமுறை எதிரொலியாக, பக்தர்களின் கூட்டம் அதிகாலையில் இருந்தே அலைமோதியது. இதனால் மலைக்கோவிலில் முருகனை தரிசிக்க பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ரோப்கார் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், மின் இழுவை ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே மின்இழுவை ரெயிலில் செல்வதற்கும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் படிப்பாதை வழியாகவும் அதிக அளவில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News