செய்திகள்

அரியலூர் பொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்- திருமாவளவன் பேட்டி

Published On 2019-04-19 10:45 GMT   |   Update On 2019-04-19 11:10 GMT
2 ஆயிரம் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதால் அரியலூர் பொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #ariyalurponparappi

கும்பகோணம்:

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கும்பகோணத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். இதனால் தமிழகத்திலும் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மேலும் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. குறிப்பாக சொல்ல வேண்டு மென்றால் பா.ம.க வாக்குச் சாவடிகளில் கைப்பற்ற வேண்டும் சாதிய வன்முறைகளை தூண்டி விட்டு அறிக்கையை வெளியிட்டனர்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிகளில் கைப்பற்ற வட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன சில இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளது .நேற்று நடைபெற்ற சிதம்பரம் தொகுதியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி இடத்தில் காலை 10 மணிக்கு தலித் மக்களை வாக்களிக்காமல் தடுத்துள்ளனர். இந்த வன்முறையால் குடிசைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தீ இட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதுபோல் தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை, நீலத்தநல்லூர் போன்ற பகுதிகளிலும் தலித்துகள் மீது வன்முறை நடைபெற்றுள்ளது. அரசியல் ஆதாயம் தேட அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளது. இதை கடுமையாக முயற்சித்து இவர்கள் தோல்வி அடைந்தனர்.

அரியலூரில் நடைபெற்ற பொன்பரப்பியில் இந்து முன்னணியினர் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. மேலும் 2 ஆயிரம் வாக்குகள் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 83 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. இதனால் கள்ள ஓட்டு போட்டது கூட காரணமாக இருக்கலாம். இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்பரப்பில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும்

இது குறித்து சிதம்பரம் தேர்தல் நடத்தும் அதிகாரி அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் இன்று சந்தித்து மனு அளிக்க இருக்கிறேன்.

சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சிறப்பாக பணியாற்றின.

தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து விடக்கூடாது என்று பலர் பகிரங்க முயற்சியில் இறங்கினர். அதை நாங்கள் தெளிவாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளோம்.

இந்த கூட்டணியில் இணைந்த பிறகு நாங்கள் வெற்றிக்கரமாக கடந்து இருக்கிறோம். அவர்கள் செய்த வன்முறைகள் எல்லாம் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம். பா.ம.க. போன்ற ஜாதி வெறி கட்சி. பா.ஜ.க. போன்ற மதவெறி கட்சிகள் செயல்படுகிற வரை சமூக நல்லிணக்கம் சமூக ஒற்றுமை ஏற்படாது .

இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #ariyalurponparappi

Tags:    

Similar News