search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் அருவியில் மூழ்கி இந்திய பொறியாளர் மரணம்
    X

    அமெரிக்காவில் அருவியில் மூழ்கி இந்திய பொறியாளர் மரணம்

    அமெரிக்காவின் புகழ்பெற்ற இ.எல்.கே அருவியில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இந்திய பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். #ElkRiverFalls # IndianEngineer #US
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புகழ்பெற்ற இ.எல்.கே அருவி அதன் அழகுடன் சேர்த்து ஆபத்துக்கும் பெயர் போனது. இந்த  அருவியில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கோகினேனி நாகார்ஜூனா என்ற இந்திய பொறியாளர் அங்கிருந்த பாறையின் மீது ஏறி நீரில் குதித்துள்ளார்.



    அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவர் பலியானார். இதுகுறித்து மீட்புப்படை அதிகாரி பால் புசனான் கூறுகையில், பாறையின் மீது இருந்து குதித்த பொறியாளர் மீள முடியவில்லை எனவும், 2 மணி நேர தேடலுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த இந்தியர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. #ElkRiverFalls # IndianEngineer #US
    Next Story
    ×