search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறியாளர்"

    • மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் மரியாதை
    • அயராது முயற்சியால் அணை கட்டும் பணி இறுதி வடிவம் பெற்று நிறைவடைந்தது.

    திருவட்டார் :

    குமரி மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சிப்பாறை அணை. 100 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் இந்த அணை திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் ஆட்சி காலத்தில் ஆங்கிலேய பொறியாள ரான ஹம்பிரே அலெக்சாண்டர் மிஞ்சின் என்பவரால் கட்டப்பட்டது. இவரது அயராது முயற்சியால் அணை கட்டும் பணி இறுதி வடிவம் பெற்று நிறைவடைந்தது. அடர்ந்த காட்டு பகுதியில் இவரது அயராது உழைப்பு மன்னரை வியக்க வைததது.

    பொதுமக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற இவர் இங்கிலாந்தில் 1868-ம் ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி பிறந்தார். 1913-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது மறைவு மன்னரை அதிர்ச்சியடைய செய்தது. இவர் மீது கொண்ட நன்ம திப்பால் மன்னர், பொறி யாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் உடலை நாகர்கோவில் இருந்து ஊர்வலமாக எடுத்துவர செய்து பேச்சிப்பாறை அணை பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார்.

    அவரது தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான அக்டோபர் 8, நினைவு நாளான செப்டம்பர் 25 ஆகிய நாட்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் திரண்டு வந்து பேச்சிப்பாறை அணையிலுள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.

    நேற்று அவரின் 110-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது அர்ப்பணிப்பு மிக்க பணிகளை நினைவு கூர்ந்து பேச்சிப்பாறை அணைக்கு அருகில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுப்பணித்துறையினர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. மாவட்ட விவசாய தொழிலாளர் அணியின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் சுருளோடு சுரேஷ் முன்னிலையில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட் டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், திருவட்டார் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜோஸ் எட்வர்ட், மாவட்ட அணி நிர்வாகிகள் அனாஸ், ஜெஎம்ஆர், அமல்ராஜ், கிளை செயலாளர்கள் அனிஷ்குமார், ஆல்பின் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி, விவசாய அணியினர் செய்திருந்தனர். முன்னதாக மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் பிறந்த தினம் நேற்று என்பதால் அவரது படத்துக்கு மரி யாதை செலுத்தப்பட்டது.

    • சேலம் மாவட்டத்தில் ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
    • இப்பணியை சென்னை தலைமை பொறியாளர் செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் பல்வேறு சாலை திட்டப்ப ணிகள் நடைப்பெற்று வருகிறது. இப்பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம், நெடுஞ்சாலைத்துறை மூலம் சேலம் மாவட்டத்தில் ஓமலூர்-சங்ககிரி-திருச்செங்கோடு-பரமத்தி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை சென்னை தலைமை பொறியாளர் செல்வன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஒப்பந்த தாரர்க ளிடம் சாலை பணிகளையும், புறவழிச் சாலை பணிகளை யும், பாலப் பணிகளையும் விரைவாகவும், தரமாகவும் முடிக்க அறிவுரை வழங்கி னார்.

    இந்த ஆய்வின்போது கோட்ட பொறியாளர் சசிகுமார், உதவி கோட்ட பொறியாளர் தாரகேஸ்வ ரன், உதவி பொறியாளர் மற்றும் சாலை பணியின் ஒப்பந்ததாரர்கள் மேற்பார்வை ஆலோசகர்க ளும் உடன் இருந்தனர்.

    • விவசாய அமைப்புகள் மரியாதை
    • திருவட்டார் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன் பங்கேற்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தின் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்குவது பேச்சிப்பாறை அணை. நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் இந்த அணை திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீ மூலம் திருநாள் ஆட்சி காலத்தில் 1895 ஆண்டு தொடங்கி 1906-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை கட்டுவதில் ஆங்கிலேய பொறியாளரான ஹம்பிரே அலெக்ஸாண்டர் மிஞ்சின் முக்கிய பங்காற்றினார். இவரது முயற்சியால் அணை கட்டும் பணி இறுதி வடிவம் பெற்று நிறைவடைந்தது. அடர்ந்த காட்டு பகுதியில் இவரது அயராது உழைப்பு மன்னரை வியக்க வைத்தது. பொதுமக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற இவர் இங்கிலாந்தில் 1868 ஆம் ஆண்டு அக்டோபர் 8-ல் பிறந்தார்.

    1913-ம் ஆண்டு செப்டம்பர் 25-ல் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது மறைவு மன்னரை அதிர்ச்சியடைய செய்தது. இவர் மீது கொண்ட நன்மதிப்பால் மன்னர் பேச்சிப்பாறை அணை கட்டிய பொறியாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் உடலை நாகர்கோவிலிருந்து ஊர்வலமாக எடுத்து வர செய்து பேச்சிப்பாறை அணை பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார். அவரது தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான அக்டோபர் 8, நினைவு நாளான செப்டம்பர் 25 ஆகிய நாட்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் திரண்டு பேச்சிப்பாறை அணையிலுள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.

    இதேபோன்று 154-வது பிறந்த தினமான நேற்று விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் திரளாக சென்று மலரஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்கினர். விவசாயிகள் அமைப்புகள் சார்பில் பாசனதுறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, பாசன சபைகளின் கூட்டமைப்பு தலைவர் புலவர் செல்லப்பா, பூமி பாதுகாப்பு சங்க தலைவர் பத்மதாஸ், மாவட்ட உற்பத்தி குழு உறுப்பினர் ஹென்றி, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், துணை தலைவர் பீனாகுமாரி திருவட்டார் ஒன்றிய தி.மு.க. தொண்டரணி முன்னாள் அமைப்பாளர் ஜெறோம், விவசாய சங்க பிரதிநிதிகள் முருகேசபிள்ளை, செண்பகசேகரபிள்ளை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொழுங்கி கட்டுமானப்பணியை தஞ்சாவூர் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆய்வு செய்தார்.
    • அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்குமாறு பொதுப்பணித்துறை அலுவலக பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநகரி கிராமத்தில் காவிரி உப கோட்ட சீர்காழி நீர்வளத் துறையின் மூலம் நடைபெறும் வெள்ளப்பள்ளம் உப்பனாறு கடைமடை நீரொ ழுங்கி கட்டுமானப்பணி, தென்னாம்பட்டினம் கிராமம் நாட்டு கண்ணி மண்ணி ஆற்றில் கடைமடை நீரொழுங்கி கட்டுமானப் பணி மற்றும் காவிரி உபகோட்டம் பொறையார் காலமாநல்லூர் மஞ்சளாறு ஆற்றின் கடைமடை நீரொழுங்கி ஆகிய கட்டுமான பணிகளை தஞ்சாவூர் காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அனைத்துப் பணிகளையும் விரை வாக முடிக்குமாறுபொதுப்ப ணித்துறை அலுவலக பொறியாள ர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற்பொ றியாளர் சண்முகம், சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செய ற்பொறியாளர் பாண்டியன் சீர்காழி உப கோட்ட உதவி பொறியாளர்கள் சரவணன், வெங்கடேசன் ,உதவி பொறியாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

    • மதுரை மண்டலத்தில் 6100 மின்கம்பங்கள் மாற்றம் தலைமை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    • இதற்காக மண்டலத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் மின்தடை பாதிப்பு பெருமளவு குறைக்கப்படும்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் பகுதியில் உதவிப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பழுதான மின் கம்பங்கள் மற்றும் பணி தொடங்கியது. இதனை மதுரை மண்டல தலைமை பொறியாளர் உமாதேவி ஆய்வு செய்து நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகமெங்கும் பழுதான மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளோம். அதனடிப்படியில் முதற்கட்டமாக உயர்அழுத்த மின்பாதையில் உள்ள மின்கம்பங்களை மாற்றும் பணியை தொடங்கியுள்ளோம். மதுரை மண்டலத்தில் உள்ள மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பழுதான மின்கம்பங்களை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழுதான மின்கம்பங்கள் 3100, புதிதாக அமைக்கும் மின்கம்பங்கள் 3,000 என மொத்தம் 6 ஆயிரத்து 100 மின்கம்பங்களும் ஜூலை 15 -ம் தேதிக்குள் மாற்றிவிட இலக்கு நிர்ணயம் செய்து பணிசெய்து வருகிறோம்.

    மேலும் மின்பாதைகளில் உள்ள மரங்களையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இதற்காக மண்டலத்திற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் மின்தடை பாதிப்பு பெருமளவு குறைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×