என் மலர்tooltip icon

    செய்திகள்

    • வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்தது
    • வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.

    இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும் எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடுகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில், வெனிசுலாவின் பொறுப்பு அதிபர் தாம் தான் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், வெனிசுலாவின் பொறுப்பு அதிபர் டிரம்ப் என்று குறிப்பிட்டுள்ள விக்கிபீடியா பக்கத்தை பகிர்ந்துள்ளார். 

    • மும்பை என்பது அது ஒரு சர்வதேச நகரம் என்று அண்ணாமலை பேசியத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    • தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு?

    மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி மும்பையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, "மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், அண்ணாமலையை விமர்சித்து பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா ராஜ் தாக்கரே தமிழர்களை இழிவாக பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராஜ் தாக்கரே, "தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் (அண்ணாமலை) இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் உங்களை (தமிழரை) பால்தாக்கரே விரட்டி அடித்தார்.. வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?" என்று ஆவேசமாக தெரிவித்தார்.

    தமிழரை பால்தாக்கரே விரட்டி அடித்தார் என்று ராஜ் தாக்கரே பேசியது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழர்களை இழிவாக பேசியதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 

    • தினமும் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120-க்கும் சவரனுக்கு 1,760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

     

    தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் கிராமுக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 287 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    11-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200

    10-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200

    9-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    8-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,000

    7-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,02,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    11-1-2026- ஒரு கிராம் ரூ.275

    10-1-2026- ஒரு கிராம் ரூ.275

    9-1-2026- ஒரு கிராம் ரூ.268

    8-1-2026- ஒரு கிராம் ரூ.272

    7-1-2026- ஒரு கிராம் ரூ.277

    • மொழியும், நிலமும் பறிபோய்விட்டால் மராட்டியர்களின் கதை முடிந்தது
    • மொழிக்காக மராட்டியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

    மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளநிலையில், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த தாக்கரே சகோதரர்கள் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளது மகாராஷ்டிரா அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியை யாரேனும் திணிக்க முயன்றால், அவர்களுக்கு உதை விழும். மொழியும், நிலமும் பறிபோய்விட்டால் மராட்டியர்களின் கதை முடிந்தது. மொழிக்காக மராட்டியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது மராத்தியர்களுக்கான கடைசி தேர்தல். இன்று இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் முடித்துவிடுவீர்கள். மராத்தி மற்றும் மகாராஷ்டிராவுக்காக ஒன்றுபடுங்கள் இந்தி உங்களின் சொந்த மொழி அல்ல என்பதை, உ.பி, பீகார் மாநில மக்கள் உணர வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
    • கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிவரும் நிலையில்,

    இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான ராபர்ட், ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து #HouseArrest செய்துள்ள ஸ்டாலின் அரசு, வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு Switch Off செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என செய்திகள் வருகின்றன.

    சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

    திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் மு.க.ஸ்டாலின் ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.

    கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார். 



    • பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம் இன்றி, இடையூறும் இன்றி, பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அந்த வகையில், பொங்கல் பண்டிகைக்காக கடந்த 9-ந்தேதி முதல் நேற்று இயக்கப்பட்ட 8,270 பேருந்துகளில் 3 லட்சத்து 58 ஆயிரத்து 496 பேர் தங்களது சொந்து ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    பொங்கல் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இதுவரை 2,38,535 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.

    அதேபோல், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகளின் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16,17, 18, 19 ஆகிய 4 நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    • நாவல்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது.
    • நாவல் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    நாவல் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

    நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிக முக்கியம். நீரிழிவு மேலாண்மையில் உதவக்கூடிய பருவகால பழமாக நாவல் பழம் அமைந்திருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் தினமும் 10 நாவல் பழங்கள் வரை சாப்பிடலாம்

    மதிய உணவுக்கு பிறகு சாப்பிடுவது சிறந்தது. நாவல் பழம் நார்ச்சத்து நிறைந்தது. இது மலச்சிக்கலைத் தடுக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வெறும் வயிற்றில் நாவல் பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடுவதற்கு கட்டுப்பாடு இருக்கிறது. சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுதான் அதற்கு காரணம். அதனால் பழங்கள் தேர்வில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு வரப்பிரசாதமாக நாவல் பழம் அமைந்திருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் ஏன் நாவல் பழம் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?

    1. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

    நாவல் பழத்தில் உள்ள ஜாம்போலின் மற்றும் எலாஜிக் அமிலம் போன்ற சேர்மங்கள், ரத்தத்தில் சர்க்கரை மெதுவாக கலக்க உதவுகின்றன. இவை சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    2. கல்லீரலை பாதுகாக்கும்

    நாவல் பழம் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்தது. இது உடலில் உள்ள நச்சுக்களை குறைத்து, அழற்சியை தணிக்க உதவும். கல்லீரல் செல்களை பாதுகாக்கவும் செய்யும்.

    3. குறைந்த கிளைசெமிக் குறியீடு

    நாவல்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டது. ஒரு நாவல் பழத்தில் சுமார் 25 வரையே இருக்கும். இதனால், ரத்தத்தில் திடீரென சர்க்கரை உயர்வதை தடுத்துவிடும்.

    4. இதய ஆரோக்கியம் காக்கும்

    நீரிழிவு நோயாளிகளுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது. நாவல் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பக்கவாத அபாயத்தை குறைக்கவும் துணை புரியும்.

    5. இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும்

    நாவல் பழத்தை டைப்-2 நீரிழிவு நோயாளிகள் முறையாக உட்கொள்வது, உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவும். இதனால் உடலில் சரியாக சர்க்கரை பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

    • 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 15-ந்தேதி பொங்கலன்று வெளியாகிறது.
    • நேற்று 'தலைவர் தம்பி தலைமையில்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    கடந்த 2024-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது 'ப்ளாக்' திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.

    இதனை தொடர்ந்து, ஜீவாவின் 45 ஆவது படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' உருவாகி உள்ளது. 'Falimy' படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இப்படத்தை இயக்கி உள்ளார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரித்துள்ளார்.

    அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி உள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படம் வருகிற 30-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், வருகிற 15-ந்தேதி பொங்கலன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    விஜயின் ஜனா நாயகன் படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையாக நேற்று வெளியாகவில்லை. இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வருகிற 21-ந்தேதி வரை ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில்தான் ஜீவா படம் முன்னதாகவே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று தலைவர் தம்பி தலைமையில்' பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஜீவா, "நான்தான் சென்சார் போர்டின் பிராண்ட் அம்பாசிடர். ஜிப்ஸி திரைப்படத்தில் 48 கட்கள் கொடுத்தனர். என்னைதான் சென்சார் போர்டு முதலில் செய்தார்கள் அவர்களோடு சேர்த்து கொரோனாவும் என்னை செய்தது" என்று கிண்டலாக தெரிவித்தார்.

    • முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான தேங்காய்த் துவையல்ரெடி.
    • பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையுடன் சோம்பு சேர்த்து அரைத்து கலந்தால் சுவையாக இருக்கும்.

    * வத்தக்குழம்பு மற்றும் காரக்குழம்பு போன்றவற்றில் காரம் அதிகமாகி விட்டால், சிறிது தேங்காய் பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதோடு சுவையாகவும் இருக்கும்.

    * சாம்பாருக்கு போடும் துவரம் பருப்பை லேசாக வறுத்து வேக வைத்தால் சாம்பார் சீக்கிரம் கெட்டுப் போகாது.

    * கேரட்டை நீரில் போட்டு வேக வைப்பதை விட இட்லி போல் ஆவியில் வேக வைத்தால் கேரட்டில் உள்ள சத்துக்கள் அழியாமல் இருக்கும்.

    * அவல் கேசரி செய்யும்போது ஒரு ஸ்பூன் நெய் விட்டு வாசனை வரும் வரை லேசாக வறுத்து, பின்பு மிக்சியில் லேசாக அரைத்து கேசரி செய்தால் ரவா கேசரி போல் இருக்கும்.

    * அடைக்கு ஊற வைக்கும்போது அரிசி, பருப்பு வகைகளுடன், ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயமும் ஊற வைத்து அரைத்தால் அடை மிருதுவாகவும், வாசனையாகவும் இருக்கும்.

    * ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலைமாவு சேர்த்து செய்து பாருங்கள். தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென நன்றாக இருக்கும்.

    * சர்க்கரை பொங்கல் செய்யும் போது பாலுக்கு பதில் பால் பவுடர் சேர்த்து செய்தால் பொங்கலின் சுவை கூடும்.

    * எலுமிச்சைப்பழ ரசம் செய்வது போல நார்த்தங்காய் சாறு பிழிந்து பருப்பு ரசம் செய்யலாம். சுவையாக இருக்கும்.

    * காய்கறிகள், கீரை போன்றவற்றை வேக வைத்த நீரைக் கீழே கொட்டாமல் ரசத்தில் சேர்த்தால் சத்து மிகுந்த ரசம் தயார்.

    * சூப் செய்ய நல்ல கிரேவி பதம் வருவதற்கு சோள மாவு கிடைக்காத பட்சத்தில் ஒரு ஸ்பூன் ஜவ்வரிசியை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து சேர்த்தால் அடர்த்தியாக இருக்கும். சத்தும் அதிகம்.

    * பீட்ரூட்டைத்துருவி ஆவியில் வேக வைத்து, கெட்டியான தயிரில் போடவும். மிளகாய், தேங்காய், சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து பீட்ரூட் கலவையில் கலந்தால் சுவை மிகுந்த பீட்ரூட் பச்சடி தயார்.

    * நீர் மோரில் சிறிது ரசப்பொடி சேர்த்து பருகினால் சுவையாக இருக்கும்.

    * நீள மிளகாயை கிள்ளி, பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துக்கொண்டால், தாளிக்கும் போதும், மற்ற உபயோகத்துக்கும் சுலபமாக இருக்கும்.

    * இஞ்சியை துருவி, வெயிலில் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொண்டால், டீ, குருமா, பொங்கல் போன்றவற்றில் சேர்க்க மணத்துக்கு மணம், உடலுக்கும் நல்லது.

    * சப்பாத்தியின் மேல் சிறிது எண்ணெய்யைத் தடவி ஒரு டப்பாவில் போட்டு மூடி பிரிட்ஜில் வைத்தால் மூன்று நாட்கள் வரை பிரெஷ்ஷாக இருக்கும்.

    * ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது தேங்காய்த்துருவல் மற்றும் வாழைப்பழத்தைச் சேர்த்து அரைத்து வைத்து ஆப்பம் வார்த்தால் ஆப்பம் சுவை மிகுந்து இருக்கும்.

    * மாங்காய்த்தொக்கு, இஞ்சித் தொக்கு என்று எதை செய்தாலும் அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிந்தால் அந்த தொக்குகள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

    * முட்டைக்கோஸைத் துருவி நன்றாக வதக்கி, மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான தேங்காய்த் துவையல்ரெடி.

    * பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையுடன் சோம்பு சேர்த்து அரைத்து கலந்தால் சுவையாக இருக்கும்.

    * இட்லிக்கு மாவு அரைக்கும்போது ஊற வைத்த அரிசியையும், உளுந்தையும் முப்பது நிமிடங்கள் பிரிட்ஜில் வைத்திருந்து அரைத்தால் மிக்சி சூடாவதை தவிர்க்கலாம்.

    • செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்கக்கூடாது.
    • விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.

    வீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் ஐந்துமுக விளக்கேற்றி, அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும்.

    மற்ற நாட்களில் இரண்டு திரிப்போட்டு இரண்டுமுக தீபம் ஏற்ற வேண்டும். ஜோடி தீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். விளக்கை துலக்குவதற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்கக்கூடாது. விளக்கில் குபேரனும், லட்சுமியும் குடியிருப்பதாக ஐதீகம். திங்கள் அல்லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கிவைத்துக் கொண்டு, விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.

    அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில், அந்நி மாலையில் பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் குத்துவிளக்கேற்றி ஜோதிக்கே ஜோதிவழிபாடு செய்தால் சோதனைகள் அகன்று சாதனைகள் நிகழ்த்த இயலும். 

    • தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தோழியை காண்பதற்காக வந்த ரவுடி ஆதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தலை, கை, கால் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ரவுடி ஆதியை வெட்டிக்கொன்றது தோழி சுசித்ராவின் உறவினர்கள் மூன்று பேர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தலைமறைவான சுசித்ராவின் உறவினர்களாக சூர்யா, அலிபாய் மற்றும் கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரெய்லரின் பல காட்சிகள் பகவந்த் கேசரி படத்துடன் ஒத்துப்போனது.
    • பகவந்த் கேசரி Amazon Prime OTT தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்து அசத்தியது.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரெய்லரின் பல காட்சிகள் பகவந்த் கேசரி படத்துடன் ஒத்துப்போனது. இதனையடுத்து 'ஜனநாயகன்' படம் சுமார் 80% 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் எனும் கருத்து சமூக வலைதளங்களில் வைரலானது

    இதனால் பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் மாபெரும் வெற்றியை பெற்ற பகவந்த் கேசரி Amazon Prime OTT தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்து அசத்தியது.

    இந்நிலையில், 'பகவந்த் கேசரி' படத்தின் அடிப்படை கருவை மட்டும் வைத்துக்கொண்டு `ஜனநாயகன்' படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று 'பகவந்த் கேசரி' இயக்குநர் அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார்.

    அண்மையில் கொடுத்த நேர்காணலில் பேசிய அனில் ரவிபுடி, "'பகவந்த் கேசரி' படத்தின் முதல் 20 நிமிடங்கள், இடைவேளை மற்றும் இரண்டாம் பாதியின் சில பகுதிகள் என சில விஷயங்கள் மட்டுமே ஜன நாயகன் படத்தில் அப்படியே இருக்கும். மற்றபடி வில்லன் கதாபாத்திரத்தை முழுமையாக மாற்றி, ரோபோ மற்றும் Sci-Fi அம்சங்களைச் சேர்த்துள்ளனர். தமிழ் ரசிகர்களுக்கு அது கண்டிப்பாக ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்" என்று தெரிவித்தார். 

    ×