என் மலர்
வழிபாடு

வீட்டில் விளக்கேற்றுவது எப்படி?
- செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்கக்கூடாது.
- விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.
வீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம். பூஜையறையில் ஐந்துமுக விளக்கேற்றி, அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாட்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும்.
மற்ற நாட்களில் இரண்டு திரிப்போட்டு இரண்டுமுக தீபம் ஏற்ற வேண்டும். ஜோடி தீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். விளக்கை துலக்குவதற்கு ஏற்ற நாட்கள் எவை என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்கக்கூடாது. விளக்கில் குபேரனும், லட்சுமியும் குடியிருப்பதாக ஐதீகம். திங்கள் அல்லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கிவைத்துக் கொண்டு, விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.
அதிகாலை பிரம்மமுகூர்த்த நேரத்தில், அந்நி மாலையில் பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் குத்துவிளக்கேற்றி ஜோதிக்கே ஜோதிவழிபாடு செய்தால் சோதனைகள் அகன்று சாதனைகள் நிகழ்த்த இயலும்.






