என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேவகோட்டை அருகே தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளை
Byமாலை மலர்1 Sep 2017 4:51 AM GMT (Updated: 1 Sep 2017 4:51 AM GMT)
தேவகோட்டை அருகே தொழிலாளி வீட்டில் 25 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டையை சேர்ந்தவர் மாணிக்கம். வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு மோகனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மோகனா நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள சகோதரர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ. 65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர்.
பின்னர் பீரோவில் இருந்த ஆவணங்கள், அடையாள அட்டை போன்றவற்றை எரித்துவிட்டு தப்பினர்.
இன்று காலை வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் மோகனாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நகை, பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேரிக்கப்பட்டது. கொள்ளைகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தேவகோட்டை டவுன் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் முழுவதுமே தொடர் கொள்ளை சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டுகள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டையை சேர்ந்தவர் மாணிக்கம். வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு மோகனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மோகனா நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள சகோதரர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ. 65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர்.
பின்னர் பீரோவில் இருந்த ஆவணங்கள், அடையாள அட்டை போன்றவற்றை எரித்துவிட்டு தப்பினர்.
இன்று காலை வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் மோகனாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நகை, பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை போலீஸ் டி.எஸ்.பி. பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேரிக்கப்பட்டது. கொள்ளைகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தேவகோட்டை டவுன் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் முழுவதுமே தொடர் கொள்ளை சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டுகள் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X