என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விராட் கோலியால் மட்டுமே உலகக்கோப்பையை வென்றுவிட முடியாது - தெண்டுல்கர்
Byமாலை மலர்22 May 2019 11:08 AM GMT (Updated: 22 May 2019 11:30 AM GMT)
கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுதர முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 14-ம் தேதி வரை நடக்கும் இந்தத் தொடரில், இந்தியா முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று நள்ளிரவு மும்பை விமான நிலையத்தில் இங்கிலாந்து புறப்பட்டு சென்றது. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய வீரர்கள் சென்றனர்.
இந்நிலையில், கேப்டன் விராட் கோலியால் மட்டுமே இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்றுவிட முடியாது என கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சச்சின் தெண்டுல்கர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
உலகக்கோப்பையின் ஒவ்வொரு ஆட்டத்திலும் அணியில் உள்ள மற்ற வீரர்கள் ஒத்துழைக்க வேண்டும். தனி ஒருவராக போராடினால் மட்டும் கோப்பையை வென்றுவிட முடியாது.
இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடுபவர்கள். அவர்கள் அணியில் எந்த இடத்தில் இறங்கினாலும் கவலையில்லை. போட்டியின் சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்றபடி வீரர்களை களமிறக்குவது முக்கியமானது.
தற்போதைய சூழ்நிலையில் உலகக்கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு நமக்கு மிகவும் அதிகமுள்ளது என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X