என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: 3-வது இடம் பிடித்தது பாகிஸ்தான்
Byமாலை மலர்2 Feb 2018 12:38 AM GMT (Updated: 2 Feb 2018 12:38 AM GMT)
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி மூன்றாவது இடம் பிடித்தது. #U19WorldCup #Pakistan
குயின்ஸ்டவுன்:
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேயா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்ற ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் 3-வது இடத்துக்காக நேற்று மோதவிருந்தன. குயின் ஸ்டவுனில் நடக்க இருந்த இப்போட்டி, கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் ரன்ரேட் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
லீக் சுற்றில் டி பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை விட ரன்ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்றிருந்ததால், அந்த அணிக்கு 3-வது இடம் வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் 4-வது இடம் பிடித்தது.
நியுசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயி பே ஓவல் மைதானத்தில் நாளை இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. #U19WorldCup #Pakistan #U19CWC
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேயா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்ற ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் 3-வது இடத்துக்காக நேற்று மோதவிருந்தன. குயின் ஸ்டவுனில் நடக்க இருந்த இப்போட்டி, கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் ரன்ரேட் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.
லீக் சுற்றில் டி பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை விட ரன்ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்றிருந்ததால், அந்த அணிக்கு 3-வது இடம் வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் 4-வது இடம் பிடித்தது.
நியுசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயி பே ஓவல் மைதானத்தில் நாளை இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு தொடங்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. #U19WorldCup #Pakistan #U19CWC
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X