என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவிடம் மோசமான தோல்வி: இலங்கை வீரர்கள் பஸ்சை முற்றுகையிட்ட ரசிகர்கள்
Byமாலை மலர்22 Aug 2017 5:53 AM GMT (Updated: 22 Aug 2017 5:53 AM GMT)
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி மோசமான தோல்வி அடைந்தது குறித்து அந்நாட்டு ரசிகர்கள் இலங்கை வீரர்கள் செல்ல இருந்த பஸ்சை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
சென்னை:
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கையை ‘ஒயிட்வாஷ்’ செய்தது.
5 ஒருநாள் போட்டி தொடரில் தடுல்லாவில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் மோசமான தோல்வியால் அந்நாட்டு ரசிகர்கள் இடையே இது மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் இலங்கை வீரர்கள் செல்ல இருந்த பஸ்சை முற்றுகையிட்டு ரசிகர்கள் கோஷமிட்டனர். பஸ் நின்று கொண்டிருந்த இடத்தில் 50-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்.
இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என்று அவர்கள் கோஷமிட்டனர். போலீசார் தலையிட்டு ரசிகர்களை சமாதானப்படுத்தினர். 30 நிமிடத்துக்கு பிறகு இலங்கை வீரர்களுடன் பஸ் தமுல்லா மைதானத்தை விட்டு புறப்பட்டு சென்றது.
சமீபகாலமாக இலங்கை அணி தோற்று வருவதால் அந்நாட்டு வீரர்கள் மீது ரசிகர்கள் மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர். மோசமான நிலையில் இருக்கும்போது தான் இலங்கை அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சங்ககரா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் ரசிகர்ளுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.
இதையும் மீறி ரசிகர்கள் இலங்கை வீரர்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பது இந்த முற்றுகை போராட்டம் காட்டியது.
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கையை ‘ஒயிட்வாஷ்’ செய்தது.
5 ஒருநாள் போட்டி தொடரில் தடுல்லாவில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் மோசமான தோல்வியால் அந்நாட்டு ரசிகர்கள் இடையே இது மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனால் இலங்கை வீரர்கள் செல்ல இருந்த பஸ்சை முற்றுகையிட்டு ரசிகர்கள் கோஷமிட்டனர். பஸ் நின்று கொண்டிருந்த இடத்தில் 50-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்.
இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இருக்க கூடாது என்று அவர்கள் கோஷமிட்டனர். போலீசார் தலையிட்டு ரசிகர்களை சமாதானப்படுத்தினர். 30 நிமிடத்துக்கு பிறகு இலங்கை வீரர்களுடன் பஸ் தமுல்லா மைதானத்தை விட்டு புறப்பட்டு சென்றது.
சமீபகாலமாக இலங்கை அணி தோற்று வருவதால் அந்நாட்டு வீரர்கள் மீது ரசிகர்கள் மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர். மோசமான நிலையில் இருக்கும்போது தான் இலங்கை அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று சங்ககரா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் ரசிகர்ளுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தனர்.
இதையும் மீறி ரசிகர்கள் இலங்கை வீரர்களுக்கு எதிரான மனநிலையில் இருப்பது இந்த முற்றுகை போராட்டம் காட்டியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X