என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மிகப்பெரிய வீரர்கள் இருந்த போது செய்ய முடியாததை தற்போதைய அணி சாதித்து காட்டி இருக்கிறது: ரவிசாஸ்திரி
Byமாலை மலர்2 Aug 2017 2:52 AM GMT (Updated: 2 Aug 2017 2:52 AM GMT)
கடந்த காலங்களில் மிகப்பெரிய வீரர்கள் இருந்தபோது செய்ய முடியாததை தற்போதைய இந்திய கிரிக்கெட் அணி சாதித்து காட்டி இருப்பதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.
கொழும்பு:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கொழும்பில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போது இந்திய அணியில் உள்ள வீரர்கள் குறைந்தது 2 ஆண்டுகளாக ஒன்றாக விளையாடி வருகிறார்கள். இதனால் அவர்கள் இப்போது நல்ல அனுபவம் பெற்றுள்ளனர். இதற்கு முந்தைய இந்திய அணிகளில் மிகப்பெரிய வீரர்கள் இருந்தும் செய்ய முடியாததை தற்போதைய இந்திய அணி ஏற்கனவே சாதித்து காட்டி இருக்கிறது. உதாரணமாக சொல்லப்போனால் 2015-ம் ஆண்டில் இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணியில் மிகப்பெரிய வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் பலமுறை இலங்கைக்கு சென்று விளையாடி உள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு ஒருபோதும் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. தற்போதைய இந்திய அணி அதனை செய்துள்ளது. வெளிநாட்டு மண்ணில் முந்தைய இந்திய அணிகள் செய்யாததை ஏற்கனவே இந்த இந்திய அணி செய்ய தொடங்கி விட்டது.
விராட்கோலி இன்னமும் இளைஞர் தான். டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக அவரை நான் கேப்டனாக பார்த்ததற்கும், தற்போது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டன் பதவியை வகித்த போது நான் அங்கு இருந்தேன். தற்போது 27 டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருந்து இருக்கிறார். எனவே பெரிய வித்தியாசத்தை நீங்கள் பார்க்கலாம். களத்தில் அவர் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து எவ்வளவு முதிர்ச்சி அடைந்து இருக்கிறார் என்பது தெரியும். அவர் தொடர்ந்து முதிர்ச்சி பெறுவார். அவருடைய வயதுக்கு அவர் நிறைய பங்களிப்பை செய்து இருக்கிறார். அவர் மிகச்சிறந்த வீரராக உருமாறுவதற்கான அறிகுறி தெரிகிறது.
தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என்று வெளிநாட்டு தொடர்கள் வருகின்றன. இவை மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் அவற்றை நான் ஒரு வாய்ப்பாகவே பார்க்கிறேன். இந்த இந்திய அணி, மற்ற இந்திய அணிகள் செய்யாததை செய்து காட்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கொழும்பில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தற்போது இந்திய அணியில் உள்ள வீரர்கள் குறைந்தது 2 ஆண்டுகளாக ஒன்றாக விளையாடி வருகிறார்கள். இதனால் அவர்கள் இப்போது நல்ல அனுபவம் பெற்றுள்ளனர். இதற்கு முந்தைய இந்திய அணிகளில் மிகப்பெரிய வீரர்கள் இருந்தும் செய்ய முடியாததை தற்போதைய இந்திய அணி ஏற்கனவே சாதித்து காட்டி இருக்கிறது. உதாரணமாக சொல்லப்போனால் 2015-ம் ஆண்டில் இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணியில் மிகப்பெரிய வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் பலமுறை இலங்கைக்கு சென்று விளையாடி உள்ளனர். ஆனால் அவர்கள் அங்கு ஒருபோதும் டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. தற்போதைய இந்திய அணி அதனை செய்துள்ளது. வெளிநாட்டு மண்ணில் முந்தைய இந்திய அணிகள் செய்யாததை ஏற்கனவே இந்த இந்திய அணி செய்ய தொடங்கி விட்டது.
விராட்கோலி இன்னமும் இளைஞர் தான். டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக அவரை நான் கேப்டனாக பார்த்ததற்கும், தற்போது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டன் பதவியை வகித்த போது நான் அங்கு இருந்தேன். தற்போது 27 டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக இருந்து இருக்கிறார். எனவே பெரிய வித்தியாசத்தை நீங்கள் பார்க்கலாம். களத்தில் அவர் நடந்து கொள்ளும் விதத்தில் இருந்து எவ்வளவு முதிர்ச்சி அடைந்து இருக்கிறார் என்பது தெரியும். அவர் தொடர்ந்து முதிர்ச்சி பெறுவார். அவருடைய வயதுக்கு அவர் நிறைய பங்களிப்பை செய்து இருக்கிறார். அவர் மிகச்சிறந்த வீரராக உருமாறுவதற்கான அறிகுறி தெரிகிறது.
தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என்று வெளிநாட்டு தொடர்கள் வருகின்றன. இவை மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் அவற்றை நான் ஒரு வாய்ப்பாகவே பார்க்கிறேன். இந்த இந்திய அணி, மற்ற இந்திய அணிகள் செய்யாததை செய்து காட்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X