என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும்- ராகுல்காந்தி நம்பிக்கை
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் பொருளாதாரத்தை எப்படி மாற்றி அமைக்க முடியும் என்று பல மாதங்களாக நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.
அதன் அடிப்படையில் தான் பல்வேறு திட்டங்களை நாங்கள் அறிவித்து இருக்கிறோம். இதில் முக்கியமான திட்டம் ஏழைகளுக்கு மாதம் ரூ 6 ஆயிரம் வழங்கும் வருமான உத்தரவாத திட்டமாகும்.
இந்த திட்டம் அமல் படுத்தப்பட்டால் இந்தியாவில் சீரழிந்த பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும். ஒட்டு மொத்த பொருளாதாரமும் மாறும். என்ஜினுக்கு பெட்ரோல் எரிசக்தியாக பயன்படுவது போல் இந்த திட்டம் ஏழைகளுக்கு சக்தியாக செயல்படும்.
பாரதீய ஜனதா ஆட்சியில் வாங்கும் சக்தியை மக்கள் இழந்து விட்டார்கள். விவசாயிகள் மிகப்பெரிய கஷ்டத்தை சம்பாதித்து வருகிறார்கள். வேலை வாய்ப்பின்மை மோசமான நிலையை எட்டி உள்ளது. இவற்றை எல்லாம் சரி செய்யும் வகையில் எங்களது திட்டங்கள் இருக்கும்.
நாங்கள் ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதாக குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. நாங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.
எங்கு வேதனை இருந்தாலும் அதை தீர்ப்பது தான் எங்களது பணி. இயற்கையாகவே இவற்றை நாங்கள் செய்வோம். இவற்றை ஓட்டு வங்கி அரசியல் என்று கூறினால் அது அவர்கள் சிந்தனை. ஒவ்வொரு இந்தியனுடைய மனதில் இருப்பதையும் கண்ணாடியாக பிரதிபலிப்பதுதான் காங்கிரசின் கொள்கை.
விவசாயிகள் பிரச்சினையில் இருக்கும் போது அவர்களுக்காக குரல் கொடுப்பது காங்கிரஸ் கட்சிதான்.
காங்கிரஸ் கட்சி இத் தேர்தலில் பல மாநிலங்களில் மிக சிறப்பான வெற்றி பெறும். தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் எங்களுக்கு சிறந்த வெற்றி கிடைக்கும்.
தமிழ்நாட்டை பொறுத்த வரை எங்களது கூட்டணி எதிரிகளை முறியடிக்கும். அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
உத்தரபிரதேசத்தில் நாங்கள் தனித்து போட்டியிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவில் தொகுதிகளை கைப்பற்றுவோம். இதற்காகத்தான் பிரியங்காவையும், ஜோதி ஆதித்ய சிந்தியாவையும் அங்கு பொறுப்பாளராக நியமித்து இருக்கிறோம்.
ரபேல் விமானத்தை நாங்கள் ரூ.526 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்தோம். ஆனால், பாரதீய ஜனதா ஆட்சியில் அதே விமானத்தை ரூ.1,600 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
கடந்த 5 ஆண்டு ஆட்சியில் இளைஞர்கள், விவசாயிகள், ஏழை தொழிலாளர்கள் என யாரை பற்றியும் மோடி அரசு கவலைப்படவில்லை. இப்போது பிரசாரம் செய்யும் இடங்களில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.
இவ்வாறு ராகுல்காந்தி கூறினார். #RahulGandhi #congress #pmmodi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்