search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "believes"

    தமிழ்நாட்டை பொறுத்த வரை எங்களது கூட்டணி எதிரிகளை முறியடிக்கும். அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். #RahulGandhi #congress #pmmodi

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் பொருளாதாரத்தை எப்படி மாற்றி அமைக்க முடியும் என்று பல மாதங்களாக நாங்கள் ஆலோசனை நடத்தினோம்.

    அதன் அடிப்படையில் தான் பல்வேறு திட்டங்களை நாங்கள் அறிவித்து இருக்கிறோம். இதில் முக்கியமான திட்டம் ஏழைகளுக்கு மாதம் ரூ 6 ஆயிரம் வழங்கும் வருமான உத்தரவாத திட்டமாகும்.

    இந்த திட்டம் அமல் படுத்தப்பட்டால் இந்தியாவில் சீரழிந்த பொருளாதாரத்தை மாற்றி அமைக்கும். ஒட்டு மொத்த பொருளாதாரமும் மாறும். என்ஜினுக்கு பெட்ரோல் எரிசக்தியாக பயன்படுவது போல் இந்த திட்டம் ஏழைகளுக்கு சக்தியாக செயல்படும்.

    பாரதீய ஜனதா ஆட்சியில் வாங்கும் சக்தியை மக்கள் இழந்து விட்டார்கள். விவசாயிகள் மிகப்பெரிய கஷ்டத்தை சம்பாதித்து வருகிறார்கள். வேலை வாய்ப்பின்மை மோசமான நிலையை எட்டி உள்ளது. இவற்றை எல்லாம் சரி செய்யும் வகையில் எங்களது திட்டங்கள் இருக்கும்.

    நாங்கள் ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதாக குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. நாங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

    எங்கு வேதனை இருந்தாலும் அதை தீர்ப்பது தான் எங்களது பணி. இயற்கையாகவே இவற்றை நாங்கள் செய்வோம். இவற்றை ஓட்டு வங்கி அரசியல் என்று கூறினால் அது அவர்கள் சிந்தனை. ஒவ்வொரு இந்தியனுடைய மனதில் இருப்பதையும் கண்ணாடியாக பிரதிபலிப்பதுதான் காங்கிரசின் கொள்கை.

    விவசாயிகள் பிரச்சினையில் இருக்கும் போது அவர்களுக்காக குரல் கொடுப்பது காங்கிரஸ் கட்சிதான்.


    காங்கிரஸ் கட்சி இத் தேர்தலில் பல மாநிலங்களில் மிக சிறப்பான வெற்றி பெறும். தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் எங்களுக்கு சிறந்த வெற்றி கிடைக்கும்.

    தமிழ்நாட்டை பொறுத்த வரை எங்களது கூட்டணி எதிரிகளை முறியடிக்கும். அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    உத்தரபிரதேசத்தில் நாங்கள் தனித்து போட்டியிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவில் தொகுதிகளை கைப்பற்றுவோம். இதற்காகத்தான் பிரியங்காவையும், ஜோதி ஆதித்ய சிந்தியாவையும் அங்கு பொறுப்பாளராக நியமித்து இருக்கிறோம்.

    ரபேல் விமானத்தை நாங்கள் ரூ.526 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்தோம். ஆனால், பாரதீய ஜனதா ஆட்சியில் அதே விமானத்தை ரூ.1,600 கோடிக்கு வாங்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

    கடந்த 5 ஆண்டு ஆட்சியில் இளைஞர்கள், விவசாயிகள், ஏழை தொழிலாளர்கள் என யாரை பற்றியும் மோடி அரசு கவலைப்படவில்லை. இப்போது பிரசாரம் செய்யும் இடங்களில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.

    இவ்வாறு ராகுல்காந்தி கூறினார். #RahulGandhi #congress #pmmodi

    டெல்லி, புதுவை ஆகியவற்றின் முட்டுக்கட்டைகளை தாண்டி ஆட்சி நடத்தி வருகிறோம். இன்னும் 4,5 மாதங்களில் விடிவுகாலம் பிறக்கும் என்று நாராயணசாமி பேசினார். #Narayanasamy

    புதுச்சேரி:

    புதுவை முதியோர் பராமரிப்பு சங்கத்தின் சார்பில் சர்வதேச முதியோர் தின விழா ஆந்திர மகாசபையில் இன்று நடந்தது. விழாவுக்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். பிப்டிக் சேர்மன் சிவா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    புதுவை அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைப்பதில்லை. அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமி‌ஷனை அமல்படுத்தியுள்ளோம். அதற்கான தொகையையும் மத்திய அரசு தரவில்லை. ஒத்த கருத்துடைய கட்சிகள் மாநிலத்திலும், மத்தியிலும் பதவியில் இருந்தால்தான் நிதி கிடைக்கும். மாற்று ஆட்சி மத்தியில் இருந்தால் மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் நடக்கின்றனர்.

    10 ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அப்போது டெல்லியில் கேட்டதெல்லாம் கொடுத்தனர். ஆனால் இப்போது கொடுக்கமாட்டோம் என சொல்வதில்லை. அதற்குப்பதில் பரிசீலனை செய்கிறோம் என்கின்றனர். 2 ஆண்டாக நிதி தருவதற்கு பரிசீலனை செய்துகொண்டே இருக்கின்றனர். ஆனால் நாங்கள் எங்கள் முயற்சியை கைவிடவில்லை. நானும், அமைச்சர்களும் மத்திய அரசை தொடர்ந்து அணுகி வருகிறோம். 15-வது நிதிக்கமி‌ஷனில் புதுவை இடம்பெறவில்லை.

    மாநிலங்களுக்கான குழுவில் இடம்பெற்றிருந்தால் 42 சதவீத நிதி கிடைக்கும். யூனியன் பிரதேச நிதி கமி‌ஷனில் சேர்த்திருந்தால் 90 சதவீதம் நிதி கிடைத்திருக்கும். ஆனால் தற்போது நமக்கு 26 சதவீதம்தான் நிதி கிடைக்கிறது. ஆனால் ஜிஎஸ்படி வரி கமிட்டியில் புதுவையை மாநிலஅரசாக மத்திய அரசு கருதுகிறது. இதனால் நிதி கமி‌ஷனில் புதுவையை இணைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    தற்போது நமக்கு மத்திய அரசின் நிதி ரூ.ஆயிரத்து 650 கோடிதான் கிடைக்கிறது. மாநிலமாக புதுவையை அங்கீகரித்தால் ரூ.3 ஆயிரத்து 700 கோடி நிதி கிடைக்கும். இத்தனை இடையூறுக்கு இடையிலும் பல்வேறு துறைகளில் நாம் தன்னிறைவு அடைந்துள்ளோம். டெல்லி, புதுவை ஆகியவற்றின் முட்டுக்கட்டைகளை தாண்டி ஆட்சி நடத்தி வருகிறோம். இதற்கெல்லாம் 4,5 மாதங்களில் விடிவுகாலம் பிறக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதியோர் பராமரிப்பு சங்கத்தின் இயக்குனர் டாக்டர் பத்மநாபன் வரவேற்றார். விழாவில் எம்எல்ஏ லட்சுமிநாராயணன், சமூகநலத்துறை இயக்குனர் சாரங்கபாணி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். #Narayanasamy

    ×