search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்பேன் - பிரதமர் மோடி பெருமிதம்
    X

    மக்கள் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்பேன் - பிரதமர் மோடி பெருமிதம்

    பீகார் மாநிலத்தின் கயாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்கள் ஆசியுடன் மீண்டும் மோடி ஆட்சி அமைப்பான் என பெருமிதத்துடன் தெரிவித்தார். #LSpolls #PMModi
    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடுமுழுவதும் நடைபெறுகிறது. இதையடுத்து, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்காக கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பீகார் மாநிலம் கயா பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:



    உங்கள் காவலாளியான நான் உங்களுக்காக இதுவரை நிறைவேற்றியுள்ள் பணிகளால் மக்களாகிய நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறீர்கள். மீதமுள்ள பணிகளையும் நானே மீண்டும் ஆட்சிக்கு வந்து நிறைவேற்றி முடிப்பேன்.

    இந்திய மக்கள் மற்றும்  வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் ஆசியுடன் மீண்டும் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பான் என தெரிவித்துள்ளார். #LSpolls #PMModi
    Next Story
    ×