search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுலின் வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட் - ஷீலா தீட்சித்
    X

    ராகுலின் வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட் - ஷீலா தீட்சித்

    ராகுல் காந்தி அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட்டாக கருதப்படுகிறது என டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார். #RahulGandhi #Congress #Poorfamily #SheilaDikshit
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரசாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இதற்கிடையே, சமீபத்தில் தேர்தல் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் (மாதம் 6 ஆயிரம் ரூபாய்) வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன்மூலம் நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதமாக இருக்கும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 25 கோடி மக்கள் பலனடைவார்கள் என தெரிவித்தார்.



    இந்நிலையில், ராகுல் காந்தி அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட்டாக கருதப்படுகிறது என டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷீலா தீட்சித், வறுமையை அடியோடு ஒழிக்க இந்த திட்டம் மிகப்பெரிய ஆயுதமாக அமையும். ராகுல் காந்தி அறிவித்துள்ள வறுமை ஒழிப்பு திட்டம் புதிய இந்தியாவின் புளு பிரிண்ட்டாக கருதப்படுகிறது. உலகில் எந்த நாட்டு அரசும் நிறைவேற்றாத ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் வழங்கும் மிகப்பெரிய திட்டமாகவும் இது இருக்கும். ராகுலின் இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். #RahulGandhi #Congress #Poorfamily #SheilaDikshit
    Next Story
    ×