search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் - கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு
    X

    புல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் - கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு

    உத்தரப்பிரதேசம் அருகே காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் கழிவறையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. #KalindiExpress
    கான்பூர்:

    உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர்-பிவானி இடையே ஓடும் காலிந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 7.10 மணிக்கு பாரஜ் பூர் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது.

    அப்போது அந்த ரெயிலின் கழிவறையில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் ரெயிலின் மேல் கூரையில் உள்ள பிளைவுட் சேதம் அடைந்தது.

    கழிவறையில் வெடித்ததால் பயணிகள் காயமின்றி தப்பினர். குண்டு வெடித்த சத்தம் கேட்டதும் ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் விரைந்து வந்து பார்வையிட்டனர். அது பட்டாசை விட சற்று சக்தி வாய்ந்தது என தெரிவித்தனர். இதனால் பயணிகள் தப்பினர்.

    குண்டு வெடித்ததும் புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பெயரில் ரெயில் நிலையத்துக்கு மிரட்டல் வந்தது.

    சம்பவ இடத்துக்கு பயங்கரவாத தடுப்பு படை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். சிறிது நேர தாமதத்துக்குப் பின் பலத்த பாதுகாப்புடன் ரெயில் புறப்பட்டுச் சென்றது. #KalindiExpress
    Next Story
    ×