search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் - காங். அரசுகளுக்கு ராகுல் கடிதம்
    X

    பாராளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் - காங். அரசுகளுக்கு ராகுல் கடிதம்

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பாராளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யுமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். #RahulGandhi #onethirdseats #onethirdseatsreservarion #reservarionforwomen
    புதுடெல்லி:

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என்னும் கொள்கையை நாட்டில் உள்ள ஒருசில அரசியல் கட்சிகள் மட்டுமே கடைபிடித்து வருகின்றன.

    இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பாராளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யுமாறு ராகுல் காந்தி இன்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, அடுத்த சட்டசபை கூட்டத்தொடரின்போது ஆளும்கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என தனது கடிதத்தில் ராகுல் வலியுறுத்தியுள்ளார். #RahulGandhi #onethirdseats #onethirdseatsreservarion  #reservarionforwomen
    Next Story
    ×