என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைவரோ, செயல்திட்டமோ இல்லாத கட்சி காங்கிரஸ் - அமித் ஷா தாக்கு
Byமாலை மலர்27 Nov 2018 11:08 AM GMT (Updated: 27 Nov 2018 11:08 AM GMT)
ராஜஸ்தானில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா காங்கிரஸ் கட்சிக்கு தலைவரும் கிடையாது செயல்திட்டமும் இல்லை என்று குறிப்பிட்டார். #Congress #Rajasthanpolls #AmitShah
ஜெய்ப்பூர்:
200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியுள்ளனர்.
இந்நிலையில், இங்குள்ள ஜலோர் மாவட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று பிரசாரம் செய்தார். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு தலைவரும் கிடையாது செயல்திட்டமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாநிலத்தில் வசுந்தராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் மாநிலத்தின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் மட்டுமில்லாமல் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
ஆனால், காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டும் என கணவு காணுகின்றது. ஆனால், அந்த கட்சிக்கு தலைமையும் கிடையாது, செயல்திட்டமும் கிடையாது என்றும் அமித் ஷா தெரிவித்தார். #Congress #Rajasthanpolls #AmitShah
200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியுள்ளனர்.
இந்நிலையில், இங்குள்ள ஜலோர் மாவட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று பிரசாரம் செய்தார். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு தலைவரும் கிடையாது செயல்திட்டமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்மாநிலத்தில் வசுந்தராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் மாநிலத்தின் வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ராஜஸ்தான் மாநிலம் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த சட்டசபை தேர்தலில் மட்டுமில்லாமல் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.
ஆனால், காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டும் என கணவு காணுகின்றது. ஆனால், அந்த கட்சிக்கு தலைமையும் கிடையாது, செயல்திட்டமும் கிடையாது என்றும் அமித் ஷா தெரிவித்தார். #Congress #Rajasthanpolls #AmitShah
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X