என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேஸ்புக் நட்பு கள்ளக்காதலாக மாறியது- ராணுவ வீரருடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி
Byமாலை மலர்22 Oct 2018 12:31 PM GMT (Updated: 22 Oct 2018 12:31 PM GMT)
புவனேஸ்வரம் அருகே ராணுவ வீரருன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனேஸ்வரம்:
மேற்கு வங்காளம் மெத்னிப்பூரை சேர்ந்தவர் மந்துப்பத்ரா. இவர் ஒரிசா மாநிலம் தென்கானல் என்ற இடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி அருணா. இவர் சமூக வலைதளம் மூலம் பலருடன் நட்பு வைத்திருந்தார். பேஸ்புக்கில் சஞ்சய்குமார் என்ற எல்லை பாதுகாப்புபடை வீரர் அருணாவுக்கு அறிமுகமானார்.
அரியான மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் அசாமில் நேபாளம் எல்லையில் பணியாற்றி வந்தார். அருணாவும், சஞ்சய்குமார் அடிக்கடி பேஸ்புக்கில் தொடர்பு கொள்வது வழக்கம். இது அவர்களுக்குள் காதலை ஏற்படுத்தியது.
சஞ்சய்குமார் அடிக்கடி தென்கானலுக்கு வந்து அருணாவை சந்திப்பார். அப்போது அவர்கள் தனிமையில் இருப்பது வழக்கம். இந்த காதல் விவகாரம் மந்துப்பத்ராவுக்கு தெரிய வந்தது. அவர் அருணாவை கண்டித்தார்.
இதனால் கணவரை தீர்த்து கட்டிவிட்டு சஞ்சய் குமாரை திருமணம் செய்து கொள்ள அருணா முடிவு செய்தார். இதற்கு சஞ்சய்குமார் சம்மதித்தார். கடந்த 3-ந் தேதி இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சஞ்சய்குமார் தென்கானலுக்கு வந்தார்.
அன்று காலை அருணா கணவர் மந்துப்பத்ராவுக்கு காலை உணவில் விஷத்தை கலந்து கொடுத்தார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அருணா காதலர் சஞ்சய் குமாரை வீட்டுக்கு அழைத்தார். அவர் கத்தியால் மந்துப்பத்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவர் அசாம் சென்று விட்டார்.
தனது கணவரை யாரோ கொன்று விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில் அருணா கொலை பின்னணியில் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரை போனை ஆய்வு செய்த போது சஞ்சய் குமாருடன் பேஸ் புக்கில் அடிக்கடி தொடர்பு கொண்டது தெரியவந்தது.
அது பற்றி தீவிரமாக விசாரித்த போது காதலருடன் சேர்ந்து கொலை செய்ததை அருணா ஒத்துக்கொண்டார். இதையடுத்து போலீசார் அசாமுக்கு சென்று சஞ்சய் குமாரை கைது செய்தனர். அருணா மற்றும் சஞ்சய் குமார் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews
மேற்கு வங்காளம் மெத்னிப்பூரை சேர்ந்தவர் மந்துப்பத்ரா. இவர் ஒரிசா மாநிலம் தென்கானல் என்ற இடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி அருணா. இவர் சமூக வலைதளம் மூலம் பலருடன் நட்பு வைத்திருந்தார். பேஸ்புக்கில் சஞ்சய்குமார் என்ற எல்லை பாதுகாப்புபடை வீரர் அருணாவுக்கு அறிமுகமானார்.
அரியான மாநிலத்தை சேர்ந்த சஞ்சய்குமார் அசாமில் நேபாளம் எல்லையில் பணியாற்றி வந்தார். அருணாவும், சஞ்சய்குமார் அடிக்கடி பேஸ்புக்கில் தொடர்பு கொள்வது வழக்கம். இது அவர்களுக்குள் காதலை ஏற்படுத்தியது.
சஞ்சய்குமார் அடிக்கடி தென்கானலுக்கு வந்து அருணாவை சந்திப்பார். அப்போது அவர்கள் தனிமையில் இருப்பது வழக்கம். இந்த காதல் விவகாரம் மந்துப்பத்ராவுக்கு தெரிய வந்தது. அவர் அருணாவை கண்டித்தார்.
இதனால் கணவரை தீர்த்து கட்டிவிட்டு சஞ்சய் குமாரை திருமணம் செய்து கொள்ள அருணா முடிவு செய்தார். இதற்கு சஞ்சய்குமார் சம்மதித்தார். கடந்த 3-ந் தேதி இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சஞ்சய்குமார் தென்கானலுக்கு வந்தார்.
அன்று காலை அருணா கணவர் மந்துப்பத்ராவுக்கு காலை உணவில் விஷத்தை கலந்து கொடுத்தார். இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அருணா காதலர் சஞ்சய் குமாரை வீட்டுக்கு அழைத்தார். அவர் கத்தியால் மந்துப்பத்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அவர் அசாம் சென்று விட்டார்.
தனது கணவரை யாரோ கொன்று விட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில் அருணா கொலை பின்னணியில் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரை போனை ஆய்வு செய்த போது சஞ்சய் குமாருடன் பேஸ் புக்கில் அடிக்கடி தொடர்பு கொண்டது தெரியவந்தது.
அது பற்றி தீவிரமாக விசாரித்த போது காதலருடன் சேர்ந்து கொலை செய்ததை அருணா ஒத்துக்கொண்டார். இதையடுத்து போலீசார் அசாமுக்கு சென்று சஞ்சய் குமாரை கைது செய்தனர். அருணா மற்றும் சஞ்சய் குமார் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X