search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்க வேண்டும்: சித்தராமையா
    X

    சபரிமலை விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்க வேண்டும்: சித்தராமையா

    சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். #Siddaramaiah #Sabarimala
    பெங்களூரு :

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ஆனால் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தீவிர போராட்டம் நடந்து வருகிறது. சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்ட பிறகும், இதுவரை பெண்கள் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த விஷயத்தில் இதற்கு முன்பு சித்தராமையா கருத்து தெரிவிக்க மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். #Siddaramaiah #Sabarimala
    Next Story
    ×