search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் 66 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் - ஒருவர் கைது
    X

    குஜராத்தில் 66 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் - ஒருவர் கைது

    குஜராத் மாநிலத்தில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் இடத்தில் நடந்த அதிரடி சோதனையில் 66 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. #Gujarat #FakeCurrency
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் அதிரடி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் கள்ள நோட்டுகள் அச்சடிப்பது உறுதி செய்யப்பட்டது.

    அந்த இடத்தில் இருந்து 66 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பு கொண்ட புதிய இரண்டாயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கள்ள நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய இயந்திரங்களையும் பறிமுதல் செய்த போலீசார் ஜாகித் ஷேக் என்பவரை கைது செய்துள்ளனர்.

    ஜாகித் ஷேக் 10 வருடங்களுக்கு முன்பு ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா வந்தவர் என்பதும், கடந்த 1 மாதங்களாக கள்ள நோட்டுகளை அச்சடித்து பயன்படுத்தி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #Gujarat #FakeCurrency
    Next Story
    ×